வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர மழை நீர் வடிகால் தொட்டிகளில் சேர்ந்துள்ள மணல்களை அள்ளி சாலையோரம் வைத்துள்ளனர் இடம் ஜி.எஸ்.டி சாலை இரும்புலியூர்
கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு திரண்ட மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் தரையிலேயே அமர்ந்து காத்துக் கிடந்தனர்
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.