கோவை நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வாலிபால் அரங்கில் கேலரிகள் அமைக்கப்படாததால், தற்போது அந்தப் பணி துவங்கி உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த அரங்கு திறக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கேலரி இல்லாதது குறித்து சுட்டிக்காட்டியதால் மீண்டும் அரங்கு பூட்டப்பட்டு புதிய கேலரியை கட்டி விளையாட்டு வீரர்களின் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியை தொடர்ந்து தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு திரண்ட மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் தரையிலேயே அமர்ந்து காத்துக் கிடந்தனர்
கடலூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை திருவண்ணாமலைக்கு மாற்றுவதை கண்டித்து விருத்தாசலம் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.