சங்க காலத்தில் மலை வெள்ளமும், மழை வெள்ளமும் பாய்ந்தோடிய வைகை, கால வெள்ளத்தில் கரைந்தோடி களையிழந்து போனாலும், மங்கையவள் ஆளும் மதுரையம்பதியோ மாற்றத்தை ஏற்று கான்கிரீட் காளான்களால் நிறைந்து நம்மனமகிழ பருந்துப் பார்வையில் விருந்து படைக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பெருக்கெடுத்து ஓடும் வருணா நதிக்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் படகு வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இஸ்கான் எனப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் சென்னை மாமல்லபுரம் சாலையில் அக்கரை என்ற இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோவிலின் சிறப்புஅலங்காரத்தில் அருள் பாலித் கிருஷ்ணர் ராதை.
ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில், இங்கு நிலவும் இதமான காலநிலையை ரசிக்க இப்போதே சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி- கூடலூர் சாலை, தலைகுந்தா பகுதியில் உள்ள பைன்சோலையை ரசிக்கும் சுற்றுலா பயணியர்.
தினமலர் நாளிதழ், பீ ரைட் நிறுவனம் மற்றும் அன்னப்பூர்ணா மசாலாஸ் சார்பில் நடந்த பிரசாதம் கோகுலாஷ்டமி விழாவில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து சொக்க வைத்த குழந்தைகள். இடம்: ராம்நகர், கோதண்டராமர் கோவில்.