கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வரும் செப்டம்பர் மாதத்தில் காலை வேளையில் மேகங்கள் சூழ்ந்து இருள் போன்ற சூழல் காணப்படுவது வழக்கம். தற்போது மழை குறைவு என்பதால் கோடை போன்று மிதக்கும் வெண் பஞ்சு மேகங்களில் சூரிய கதிர்கள் பட்டு மின்னுகின்றன. இடம்: மூணாறு அருகே பெரியகானல்.
வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெய்ந்தியை முன்னிட்டு மனித கோபுரம் அமைத்து உறியடிக்கும் நிகழ்ச்சி பிரபலம். இது வெறும் விளையாட்டல்ல; ஒற்றுமை, பலம் மற்றும் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் கொண்டாடப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நிகழச்சியில் பங்கேற்றோர்.
தொடர் கனமழையால் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் பீஹாரின் பாட்னாவில் ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள வீட்டை வெள்ள நீர் பகுதியளவு மூழ்கடித்தது. இதனால் அங்கு வசிக்கும் குடும்பத்தினர் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாணவிகள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சங்க காலத்தில் மலை வெள்ளமும், மழை வெள்ளமும் பாய்ந்தோடிய வைகை, கால வெள்ளத்தில் கரைந்தோடி களையிழந்து போனாலும், மங்கையவள் ஆளும் மதுரையம்பதியோ மாற்றத்தை ஏற்று கான்கிரீட் காளான்களால் நிறைந்து நம்மனமகிழ பருந்துப் பார்வையில் விருந்து படைக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பெருக்கெடுத்து ஓடும் வருணா நதிக்கரையில் அமைந்துள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வீடுகளுக்குள் சிக்கிய மக்கள் படகு வாயிலாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.