உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பெய்த கனமழையால் ஹர்ணி என்ற கிராமத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். வீடு தரைமட்டமான இடத்தை அதிர்ச்சியுடன் பார்வையிட்ட கிராம மக்கள்.
குன்னூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் செக்க சிவந்த வானம் நகரை நிறம் மாற்றிய காட்சி, மக்களை வியப்படைய செய்தது.
திருப்பூர், குண்டடம், சின்னாரிபாளையம் பகுதியில் டாஸ்மாக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாதர் தேசிய சமமேளத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வானூர் அடுத்த ஆன்பாக்கம் கிராமத்தில் சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், சுப்பிரமணியர், எல்லை காளியம்மன்,எல்லை அய்யனாரப்பன்,வீரனார், கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.