உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பெய்த கனமழையால் ஹர்ணி என்ற கிராமத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். வீடு தரைமட்டமான இடத்தை அதிர்ச்சியுடன் பார்வையிட்ட கிராம மக்கள்.
நாடு முழுவதும் வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு பக்தர்கள் புடைசூழ எடுத்து செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலைகள்.
பீஹார் மாநிலத்தில் தொடர் மழையால் கங்கை ஆற்றின் துணை ஆறான புன்புன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ரயில் பாலத்தை தொட்டு செல்லும் வகையில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. அந்த பாலத்தை கடந்து சென்ற பயணியர் ரயில். இடம்: பாட்னா.