ஆதம்பாக்கம் - ஆலந்தூர் இடையே முறையான நடைமேம்பாலம் இல்லாததால், ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள். இடம் : ஆலந்தூர்
பருவமழை காரணமாக புன்புன் நதியின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ள குடியிருப்புகள். இடம்: பாட்னா, பீஹார்.
வரும் 14ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு மஹாராஷ்டிராவின் மும்பையில் புகழ்பெற்ற லால்பாக் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்படும், லால்பாக் ராஜா என அழைக்கப்படும் பிரமாண்ட விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் வெள்ளியால் ஆன பாரம்பரிய நகைகளை சரிபார்த்த விழா குழுவினர்.
குன்னூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் செக்க சிவந்த வானம் நகரை நிறம் மாற்றிய காட்சி, மக்களை வியப்படைய செய்தது.
திருப்பூர், குண்டடம், சின்னாரிபாளையம் பகுதியில் டாஸ்மாக கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாதர் தேசிய சமமேளத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.