ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இளம் விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் கண்களில் கருப்பு துணி கட்டி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் ஸ்கேட்டிங் போட்டியில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த மாணவர்கள்.
முதல்வர் கோப்பை காண விளையாட்டியில் பெண்களுக்கான கபடி போட்டியில் குன்றக்குடி அணியும் சிவகங்கை அணியும் விளையாடினர்.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்.