கடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பது தொடர்பான நடந்த ஆலோசனைக் கூட்டம் டி.ஆர்.ஓ.,சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் குடிநீர் சரியான முறையில் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் செங்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்ததை திரும்பப் பெற வேண்டி தென்னரசம்பட்டு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்.
தூத்துக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்கள் குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதால் தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்புகள் அப்படியே தேக்கமடைவதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் நலத்திட்ட சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.