புதுச்சேரி உப்பளம் விளையாட்டு மைதானத்தில் ஒருவரை பாம்பு கடித்த சம்பவத்தை முன்னிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜசேகரன் நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சமையல் கூடத்தை பார்வையிட்டார்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மொழி தமிழ் இலக்கிய திருவிழா முன்னிட்டு நடந்த பாரம்பரிய கண்காட்சியை காண வந்தவர்களை மாணவி தப்பட்டை இசைத்து வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் குடிநீர் சரியான முறையில் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் செங்கம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பது தொடர்பான நடந்த ஆலோசனைக் கூட்டம் டி.ஆர்.ஓ.,சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது
திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்ததை திரும்பப் பெற வேண்டி தென்னரசம்பட்டு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்.