தாம்பரம் வேளச்சேரி மேஜர் முகுந்து வரதராஜன் சாலையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் கீழ் ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதால் தொடர் போக்குவரத்து நெரிசல்
பணி மாறுதல் உத்தரவு வழங்க வலியுறுத்தி திருப்பூர், பி.என்., ரோடு மேட்டுப்பாளையம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனிதர்களுக்காக ரோபோ போராட்டம்:செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், மனிதர்களின் வேலையை காப்பாற்றும் வகையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. மனிதர்களுக்காக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மனித உருவ ரோபோ, நாய் வடிவ ரோபோக்கள். இடம்: வார்சா, போலந்து.