ஓஎம்ஆர் எனும் பழைய மாமல்லபுரம் சாலை டைடல் பார்க் சந்திப்பில் பாதசாரிகள் கடப்பதற்கு வசதியாக நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டது; அதை முறையாக பாதசாரிகள் பயன்படுத்தாமல் சாலையிலேயே கூட்டமாக கடந்து செல்வதால் வாகனங்கள் தினமும் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மனிதர்களின் வேலையை காப்பாற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. மனிதர்களுக்காக பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மனித உருவ மற்றும் நாய் வடிவ ரோபோக்கள். இடம்: வார்ச்சா, போலந்து.
பீஹாரில் கனமழை காரணமாக கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பாட்னாவை ஒட்டிய திதரகஞ்ச் பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்திய வெள்ள நீர்.
விநாயகர் சதுர்த்தி வரும் 14ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நிலக்கடலையால் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகர் சிலைக்கு இறுதி வடிவம் கொடுத்த கலைஞர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கீரமங்கலம் ஆரம்ப மருத்துவ நிலையத்தில் மின் தடையால் மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கொடைக்கானல் என்றாலே சுற்றுலா தலம் என்று நினைக்கும் பலருக்கும் விவசாய பூமியுடன் கூடிய இந்த ஒரு சிறு கிராமமும் கண்ணுக்கு இனிய சொர்க்க பூமி தான். இடம்: பூம்பாறை.
சுகாதாரமற்ற முறையில் ஆம்லெட் உள்ளிட்டவைக்கு பயன்படுத்தும் வெங்காயம் பச்சை மிளகாய்களை ரோட்டின் அருகே திறந்த வெளியில் வைத்திருக்கும் உணவம். இடம்: போத்தனூர்.
ஓ எம் ஆர் சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் நாள்தோறும் பீக் அவரில் அதிக அளவில் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம் : திருவான்மியூர்