கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன்பு ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பில் துவங்கிய நாட்டியாஞ்சலி நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை ஒட்டி நேற்று திருநெல்வேலியில் அவர் பயின்ற ம.தி.தா., இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் அவரை நினைவுகூரும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..
கோவை விக்டோரியா ஹாலில் நடந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் மண் அள்ளும் வாகனத்திற்கான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் பலரும் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் உற்பத்தியாகும் தக்காளிக்கு விலை கிடைக்காததாலும் முழு வளர்ச்சியடைவதற்கு முன்பாகவே நோய்வாய் படுவதாலும் விவசாயிகள் ரோட்டோரம் கொட்டி சென்றுள்ளனர்..