மஹாராஷ்டிராவின் நாக்பூரில் விவசாய பணிகளுக்கு உதவும் கால்நடைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் போலா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் இறுதிநாளில் பெண் உருவ பொம்மைகளை உருவாக்கி ஊர்வலமாக எடுத்து சென்று எரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் போட்டி போட்டு ஏறிய பயணியர். இடம்: தாம்பரம் ரயில் நிலையம், சென்னை.