விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பிரக்ருதி மற்றும் ரோகிணி ஆகிய யானைகளை அலங்கரித்து விநாயகரின் சிறப்பு உணவான ராகி கொழுக்கட்டை உணவாக அளிக்கப்பட்டது.
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( செப்.,14) கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரிய இசை வாத்தியமான டிரம்ஸ்களை இசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபர்கள்.
நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புனித கங்கை நதிக்கு மாலை நேரங்களில் ஆரத்தி எடுப்பது மிகவும் பிரபலம். இதேபோன்று, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக ஆரத்தி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் திரளாக பங்கேற்றனர்.
வார இறுதி தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பல பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று(செப் 14) திருச்சி, மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையை படையலிட துாளியில் கட்டி மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
'கல்வியே கடவுள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பிரமாண்ட விநாயகர் சிலை, சென்னை மணலி, பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வைக்கப்பட்டுள்ளது. 2,000 முகம் பார்க்கும் கண்ணாடி, 1,800 குங்கும சிமிழ் மற்றும் கலசங்களை பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட இந்த சிலை, காண்போரை கவர்ந்து வருகிறது.
மருத்துவ குணம் மிக்க பிரம்ம கமலம் ஆண்டுக்கொரு முறை இரவில் மட்டுமேமலரும். கோவை துடியலூர் முத்துநகரில் ஒரு வீட்டில் நள்ளிரவில் பூத்திருந்த பிரம்ம கமலம்.