தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பொம்மி கோவிலை சுற்றி வலம் வந்து விநாயகரை வணங்கின.
15-Sep-2026

ShareTweetShareShare

2/

மெல்லியபிறை நிலவும், வெள்ளி கோளும் மிகவும் நெருக்கமாக இணைந்து காட்சி அளிக்கும் ஆபூர்வ வானியல் நிகழ்வை நேற்றிரவு சென்னையில் காண முடிந்தது. இந்த காட்சி வெறும் கண்ணாலேயே பார்ப்பதற்கு மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருந்தது.
15-Sep-2026

இன்றைய போட்டோ14-Sep-2026

3/

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( செப்.,14) கொண்டாடப்பட்டது. மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பாரம்பரிய இசை வாத்தியமான டிரம்ஸ்களை இசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நபர்கள்.
14-Sep-2026

4/

நம் நாட்டின் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் புனித கங்கை நதிக்கு மாலை நேரங்களில் ஆரத்தி எடுப்பது மிகவும் பிரபலம். இதேபோன்று, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தேம்ஸ் நதிக்கரையில் முதல் முறையாக ஆரத்தி விழா கோலாகலமாக நேற்று நடந்தது. இதில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் திரளாக பங்கேற்றனர்.
14-Sep-2026

5/

வார இறுதி தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பல பயணிகள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
14-Sep-2026

6/

 விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று(செப் 14) சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.
14-Sep-2026

7/

 விநாயகர் சதுர்த்தி விழாவான இன்று(செப் 14)  திருச்சி, மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு 75 கிலோ கொழுக்கட்டையை படையலிட துாளியில் கட்டி மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
14-Sep-2026

8/

'கல்வியே கடவுள்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பிரமாண்ட விநாயகர் சிலை, சென்னை மணலி, பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் வைக்கப்பட்டுள்ளது. 2,000 முகம் பார்க்கும் கண்ணாடி, 1,800 குங்கும சிமிழ் மற்றும் கலசங்களை பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட இந்த சிலை, காண்போரை கவர்ந்து வருகிறது.
14-Sep-2026

9/

மருத்துவ குணம் மிக்க பிரம்ம கமலம் ஆண்டுக்கொரு முறை இரவில் மட்டுமேமலரும். கோவை துடியலூர் முத்துநகரில் ஒரு வீட்டில் நள்ளிரவில் பூத்திருந்த பிரம்ம கமலம்.
14-Sep-2026

10/

மொரட்டாண்டி சனீஸ்வரர் பகவான் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 54 அடி உயர கிரக சாந்தி விநாயகருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.
14-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us