sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

ஆடுகளம்

/

 கோல்ப் விளையாட்டில் சாதிக்கும் இரு பெண்கள்

/

 கோல்ப் விளையாட்டில் சாதிக்கும் இரு பெண்கள்

 கோல்ப் விளையாட்டில் சாதிக்கும் இரு பெண்கள்

 கோல்ப் விளையாட்டில் சாதிக்கும் இரு பெண்கள்


ADDED : நவ 28, 2025 05:42 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

: கோல்ப் விளையாட்டில் மைசூரை சேர்ந்த உறவினர்களான பிரணவி, விதாத்ரி தேசிய அளவில் கலக்கி வருகின்றனர்.

மைசூரு நகரின் லட்சுமிபுரத்தை சேர்ந்த சரத் சந்திரராஜ் அர்ஸ் - கைவல்யா தம்பதி. இவர்களின் மகன் சமர்த், மகள் பிரணவி. இவர்களின் உறவினர்கள் காந்தராஜ் -- ரம்யா. இவர்களின் மகள்கள் தியூதி, விதாத்ரி, மகன் அட்ரே ஆகியோர் லட்சுமிபுரத்தில் வசித்து வருகின்றனர்.

சரத் சந்திரராஜும், மகன் சமர்த்தும் மைசூரு கோல்ப் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். ஓய்வு நேரத்தில் கோல்ப் விளையாட செல்வர். அவர்களுடன் பிரணவியையும் அழைத்து செல்வர். இந்த விளையாட்டை பார்த்த பிரணவிக்கு, அதில் ஈடுபாடு ஏற்பட்டு விளையாட துவங்கினார். இவரை பார்த்த விதாத்ரிக்கும் கோல்ப் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

தற்போது இருவரும் தேசிய, சர்வதேச அளவில் கோல்ப் விளையாட்டில் அசத்தி வருகின்றனர்.

இது குறித்து பிரணவி கூறியதாவது:

என் தந்தையும், சகோதரரும் கோல்ப் விளையாடுவதை பார்த்து, எனக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது. என் 7வது வயதில், தென்மண்டல ஜூனியர் கோல்ப் விளையாட்டில் பங்கேற்று, கோப்பையை வென்றேன். அன்று முதல் என் வெற்றி பயணம் தொடர்கிறது.

கடந்த 2018ல், கோல்ப் விளையாட்டில் சரியாக விளையாட முடியவில்லை. 2023 ஆசிய போட்டியில் பங்கேற்றேன். சர்வதேச அளவில் என் நாட்டின் சார்பில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரணவி உறவினர் விதாத்ரி கூறியதாவது:

பிரணவி, கோல்ப் விளையாடுவதை பார்த்து, ஜெயசாமராஜேந்திரா உடையார் கோல்ப் கிளப்பில் சேர்ந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு கோல்ப் போட்டிகளில் விளையாடி வருகிறேன். பல போட்டிகளில் விளையாடி வந்தாலும், இதுவரை கோப்பைகள் வெல்லவில்லை.

ஆனாலும், மன உறுதியுடன் தொடர்ந்து விளையாடுகிறேன். 2024 ல் நடந்த 'அமெச்சூர் சர்க்யூட்' போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஒலிம்பிக்கில், நாட்டிற்காக விளையாடி, கோப்பை வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

28_Article_0001, 28_Article_0002

பிரணவி அர்ஸ், விதாத்ரி அர்ஸ்

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us