தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : ஜூலை 25, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

* கேசரி செய்யும் போது கேசரி பவுடர் சேர்க்காமல், குங்குமப்பூ சேர்த்தால் சுவை, மணம் கூடும்.

* ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது மீந்துபோன சாதத்தை சேர்த்து அரைக்கலாம்.

* வாழைத்தண்டு கூட்டு செய்யும் போது பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

* உளுந்து வடை செய்யும் போது நிறைய கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் வடை வாசனையாக இருக்கும்.

* வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு, சில மணி நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த பின், வெங்காயத்தை நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படாது.

* அடை மாவில் துருவிய கேரட், கோஸ் சேர்த்து அடை செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

* வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது புளித்த மோர் சேர்த்து கொண்டால், வெண்டைக்காய் மொறுமொறுப்பாக இருக்கும்.

* பருப்பு உருண்டை குழம்பு செய்யும் போது, உருண்டைகளை பொரித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.

* சுண்டல் வேக வைத்து சாப்பிடும் போது தாளித்து தேங்காய் துருவல் போட்டு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.

* முட்டை தொக்கு செய்யும் போது பெரிய வெங்காயம் நிறைய சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.

* கேரட்டின் தலைப்பகுதியை வெட்டிவிட்டு ஸ்டோர் செய்தால், கேரட் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

* வெந்தய குழம்பு செய்யும் போது, சிறிதளவு எள்ளு பொடி சேர்த்துக்கொண்டால் குழம்பு வாசனையாக இருக்கும்.

சப்பாத்தி சூடாக இருப்பதற்கு, சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைக்கலாம்.

* முருங்கைப்பூக்களை தேங்காய் எண்ணெய்யில் லேசாக வறுத்து, மோர்க்குழம்பில் சேர்த்து ஒரு கொதி வரும்வரை சமைத்தால், குழம்பில் மணமும் சுவையும் அதிகரிக்கும்.

* மைதாவில் போளி செய்வதற்கு பதிலாக, கோதுமை மாவில் போளி செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

* சாம்பார் நீர்த்து போயிருந்தால், பொட்டுக்கடலை பொடியை சிறிதளவு சேர்த்து கொதிக்கவிட்டால், விரைவில் சாம்பார் கெட்டியாகி விடும்.

* மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து அதில் கொஞ்சம் தேங்காய் துருவலும், சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us