sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

பசியை கண்டறியும் மிஷின் கண்டுபிடித்த இளைஞர்

/

பசியை கண்டறியும் மிஷின் கண்டுபிடித்த இளைஞர்

பசியை கண்டறியும் மிஷின் கண்டுபிடித்த இளைஞர்

பசியை கண்டறியும் மிஷின் கண்டுபிடித்த இளைஞர்


ADDED : டிச 07, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 07, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

மங்களூரு பிஜர் பகுதியை சேர்ந்தவர் சோஹன் ராய், 23. இவர் பொறியியல் கல்லுாரியில் சேர்ந்து குடும்ப சூழலால், பாதியிலேயே படிப்பை விட்டார். புதிதாக எதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம், சிறுவயதில் இருந்தே இருந்து வந்தது. இந்த வரிசையில், மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்து உள்ளார்.

இந்த ஸ்டெதாஸ்கோபில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி உள்ளார். ஸ்டெதாஸ்கோபின் காது பகுதியை தனியாக கட் செய்து, அதில் மைக்ரோசிப், மின்கலம் பொருத்தி ஒரு மொபைல் போன் வடிவமைத்து உள்ளார். இந்த கருவியை வயிற்றுப்பகுதிக்கு அருகில் வைத்து விட வேண்டும். வயிற்றில் இருந்து வரும் சத்தத்தின் மூலம் பசியாக உள்ளாரா என்பதை கருவி கண்டுபிடித்து விடும்.

பின், தானாக அவரது மொபைல் போன் மூலம் சொமேட்டா செயலியில் உணவை ஆர்டர் செய்துவிடும்.

கிழமை வாரியாக தனக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்யும் வகையில் கருவியையும் வடிவமைத்து உள்ளார். இந்த கருவிக்கு 'மாம்' என ஆங்கிலத்தில் பெயரிட்டு உள்ளார்.

இவரது, கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனால், பல முன்னணி தொழில் நிறுவனங்களும், அவரை தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற வரவேண்டும் படி அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து, அவர் கூறியதாவது:



இந்த கருவியை கடினமான முயற்சிகளுக்கு பின் கண்டறிந்தேன். நான் பல வேலைகள் செய்வதால், சாப்பிடுவதற்கே மறந்து விடுகிறேன். இதனால், எனக்கு நினைவூட்டும் வகையிலும், தானாகவே உணவை ஆர்டர் செய்யும் வகையிலும் ஒரு கருவியை கண்டறிந்தேன். இதற்கு 'மாம்' என பெயரிட்டதற்கு காரணம், அம்மா எப்படி சரியான நேரத்திற்கு கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைப்பாரோ, அதுபோல இந்த கருவியும் செய்யும்.

இந்த கருவி 'ஒயர்லஸ் டிவைஸ்' மூலம் இயங்குகிறது. கம்ப்யூட்டரில் புரோகிராமிங் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், வயிற்றின் சத்தத்தை வைத்து, பசியாக உள்ளேன் என்பதை கண்டறிந்து தானாக உணவு ஆர்டர் செய்ய முடியும். பலரது பாராட்டுகளுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us