sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/ மீதமாகும் உணவில் 'வெங்காய சாதம்'

மீதமாகும் உணவில் 'வெங்காய சாதம்'

மீதமாகும் உணவில் 'வெங்காய சாதம்'


ADDED : நவ 01, 2024 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 11:14 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசகர்களே வணக்கம்.

எல்லாருக்கு தீபாவளி வாழ்த்துகளை சொல்லிக்கிறேன். போன வாரமே சொல்லியிருக்கணும் முடியவில்லை.

இப்ப நம்ம கதைக்கு வருவோம். இன்னிக்கு நாம, காலையில பசங்களை ஸ்கூலுக்கு நேரத்துல அனுப்புறதற்கும், திடீர்னு விருந்தாளிங்க வந்தாங்கன்னா உடனடியா செஞ்சி தரவும் 'வெங்காய சாதம்' தயார் செய்யலாமா.

தேவையான பொருட்கள்


சமைத்த சாதம் அல்லது மீதமான சாதம், வெங்காயம், ரசம் பொடி, உப்பு, புளி, வெல்லம், கறிவேப்பிலை, கடுகு, சீரகம், மஞ்சள், கொத்தமல்லி இலைகள்.

அரை கப் அரிசி

2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்

அரை தேக்கரண்டி கடுகு

அரை டீஸ்பூன் சீரகம்

7 - 8 கறிவேப்பிலை இலை

ஒரு பெரிய வெங்காயம்

கால் தேக்கரண்டி மஞ்சள் துாள் ஒரு டீஸ்பூன் ரசம் துாள்

2 டீஸ்பூன் கொத்தமல்லி தழை ருசிக்கு ஏற்ப புளி, வெல்லம் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு

வழிமுறைகள்


அரிசியை சமைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். கஞ்சியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்

வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடாக்கவும். கடுகு மற்றும் சீரகத்துாள் சேர்க்கவும். கறிவேப்பிலையை சேர்க்கவும்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும். வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும். மஞ்சள், உப்பு, ரசம் துாள் சேர்த்து கலக்கவும். ஏற்கனவே பிழிந்து வைத்துள்ள புளிச்சாறை ஊற்றவும். வெல்லத்தை சேர்க்கவும். நன்றாக வதக்கி, அடுப்பை குறைந்த பிளேமில் ஒரு நிமிடம் வைக்கவும்.

தயாராக உள்ள சாதத்தை, வாணலியில் போடவும். அதன் மீது ஏற்கனவே நறுக்கி வைக்கப்பட்டுள்ள சிறிது கொத்தமல்லிஇலைகளை துாவவும். நன்றாக கலந்து, அடுப்பை அணைக்கவும். காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் இந்த உணவை ருசி பார்க்கலாம்.

நீங்கள் வேண்டுமானால், இன்றோ, நாளையோ கூட செய்து பாருங்கள். குழந்தைகள், இன்னும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்வர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us