sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

சுற்றுலா

/

 அரிய விலங்குகள் காணப்படும் சோம்பல் கரடி சரணாலயம்

/

 அரிய விலங்குகள் காணப்படும் சோம்பல் கரடி சரணாலயம்

 அரிய விலங்குகள் காணப்படும் சோம்பல் கரடி சரணாலயம்

 அரிய விலங்குகள் காணப்படும் சோம்பல் கரடி சரணாலயம்


ADDED : பிப் 12, 2026 05:49 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சோம்பல் கரடி' என்பது இந்தியா, இலங்கை, நேபாளத்தின் வறண்ட காடுகளில் வசிக்கும், தனித்துவமான பாலுாட்டி வகையாக அறியப்படுகிறது.

நீண்ட, வளைந்த நகங்கள், கரையான்களை உறிஞ்சி உண்ணும் சிறப்பு வாய்ந்த உதடுகளை கொண்ட சோம்பல் கரடி, இரவில் சுறுசுறுப்பாகவும், பகலில் சோம்பலாகவும் இருக்கும். இதன் ஆயுள்காலம், 20 முதல் 30 ஆண்டுகள்.

இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் சோம்பல் கரடி சரணாலயம், கர்நாடகாவின் பல்லாரியில், 1994 ல் துவங்கப்பட்டது. பல்லாரியின் சண்டூர், கூட்லிகி தாலுகாக்களில், 167.59 சதுர கி.மீ., துாரத்திற்கு சரணாலயம் பரந்து விரிந்து உள்ளது. இங்கு, 60 சோம்பல் கரடிகள் வசிக்கின்றன.

இங்கு சுற்றுலா வருவோர் சோம்பல் கரடியை மட்டுமின்றி சிறுத்தை, சிறிய புனுகு பூனை, பனை புனுகு பூனை, காட்டு பூனை, நரி, முள்ளம்பன்றிகள், நட்சத்திர ஆமைகள் இந்திய சாம்பல் ஓநாய், கழுதைபுலி, காட்டுபன்றி, பாங்கோலின் உள்ளிட்ட விலங்குகளையும், வைப்பர், கிரெய்ட்ஸ் உள்ளிட்ட விஷ பாம்புகளையும், ரெட் சாண்ட் போவா போன்ற விஷமற்ற பாம்புகளையும் காணும் வாய்ப்பு உண்டு.

மயில்கள், பறவைகளின் தாயகமாகவும் சரணாலயம் அமைந்து உள்ளது. குடேகாட் காட்டில் அமைந்திருக்கும் சரணாலயத்தில், சீதா பழம் மரங்களும் உள்ளன.

தினமும் மாலை 4:00 முதல் மாலை 6:00 மணி வரை சரணாலயம் திறந்திருக்கும். சபாரி செல்ல ஒரு நபருக்கு, 2,000 ரூபாய் கட்டணமாகும்.

எப்படி செல்வது?  பெங்களூரில் இருந்து, 270 கி.மீ., துாரத்தில் சரணாலயம் உள்ளது.

 மெஜஸ்டிக்கில் இருந்து கூட்லிகி, சண்டூர் செல்லும் அரசு பஸ்சில் செல்லலாம்.

 ரயிலில் செல்வோர் பல்லாரி அல்லது சித்ரதுர்காவின் மொலகால்மூர் ரயில் நிலையத்தில் இறங்கினால், சரணாலயத்தை எளிதாக அடையலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us