
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு வாழைப்பழங்களுடன், இரு முட்டை சேர்த்து, நன்றாக கூழ் பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் ஓட்ஸ் பவுடர், சிறிது தேங்காய் எண்ணெய், சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கலக்கி கொள்ளவும். இதை கேக் பவுல், கப் என ஏதாவது ஒன்றில் நிரப்பி, ஓவனில் வைத்து, பேக்கிங் செய்யலாம். கேக் தயாரானதும், வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை மிக்ஸியில் அடித்து, கேக் மீது கிரீம் இருப்பது போல தயார் செய்து கொடுத்தால், மிச்சம் வைக்காமல், உங்க பப்பி சாப்பிடும்.

