/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
நிலத்தடியில் தண்ணீர் தொட்டி நீர்க்கசிவை தவிர்க்க வேதி திரவம்
/
நிலத்தடியில் தண்ணீர் தொட்டி நீர்க்கசிவை தவிர்க்க வேதி திரவம்
நிலத்தடியில் தண்ணீர் தொட்டி நீர்க்கசிவை தவிர்க்க வேதி திரவம்
நிலத்தடியில் தண்ணீர் தொட்டி நீர்க்கசிவை தவிர்க்க வேதி திரவம்
ADDED : மார் 01, 2025 05:58 AM
கூடுமான வரை, எலக்ட்ரிக்கல் லைன் அருகே நீர்க்குழாய்கள் அமைப்பதை தவிர்க்கலாம். நிலத்தடியில் குடிநீர் நிரப்புவதற்கு உள்ள தொட்டியின் வெளிப்புறம் நன்கு பூசப்பட வேண்டும்.
கெமிக்கல் பூச்சு, அதாவது நீர்க்கசிவுத் தடுப்பு வேதித்திரவத்தை, 100 முதல், 200 மி.லி., வரை, ஒரு மூட்டை சிமென்ட்டுக்கு கலக்கலாம். தொட்டியின் வெளிப்புறம் உள்ள கீழே போடப்பட்டிருக்கும் சாதாரண கான்கிரீட்டை சேர்த்து, எல்லா மூலைகளையும் குழைவு கொடுத்து, சுவர் முழுவதும் பூச வேண்டும்.
பூசிய உடனே இந்த நீர்க்கசிவுத் தடுப்பு வேதித்திரவத்தை மூட்டைக்கு, 100 மி.லி., என்ற அளவுக்கு சிமென்ட் பால் கரைத்து, பிரஷ் செய்து நன்கு வழவழப்பாக பூச வேண்டும். எந்த ஓர் இணைப்பும் விடமால், ஒரு நாளில் அனைத்து பூச்சு வேலைகளும் முடிய வேண்டும்.
இப்படி செய்தால், தரையின் மேற்பரப்பில் உள்ள, மாசுபட்ட தண்ணீர் மற்றும் பக்கத்தில் உள்ள சாக்கடை நீர், தொட்டியினுள் கசிந்து வராமல் பாதுகாக்கப்பட்டு விடும். உள்பூச்சு பூசும்போது நீர்க்கசிவு தடுப்பு வேதித்திரவத்தை, கலந்து பூசலாம் என்கின்றனர் பொறியாளர்கள்.