sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

வீட்டின் கலர் தேர்வு செய்யும் '3டி' நுட்பம்; எளிய முறையில் அழகிய தோற்றம் சாத்தியம்

/

வீட்டின் கலர் தேர்வு செய்யும் '3டி' நுட்பம்; எளிய முறையில் அழகிய தோற்றம் சாத்தியம்

வீட்டின் கலர் தேர்வு செய்யும் '3டி' நுட்பம்; எளிய முறையில் அழகிய தோற்றம் சாத்தியம்

வீட்டின் கலர் தேர்வு செய்யும் '3டி' நுட்பம்; எளிய முறையில் அழகிய தோற்றம் சாத்தியம்


ADDED : ஜூலை 18, 2025 09:38 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொந்தமாக வீடு கட்டினாலும், வாங்கினாலும் அதன் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில்தான், பெரும்பாலோர் கவனம் செலுத்துகின்றனர். வீட்டில் அனைத்து அறைகளும் குறிப்பிட்ட வண்ணத்தில்தான் இருக்க வேண்டும் என்று, ஒவ்வொருவருக்கும் எண்ணம் இருக்கும்.

ஆனால், நமக்கு பிடித்தது என்பதையும் கடந்து, எந்த அறைக்கு எத்தகைய வண்ணம் பொருத்தமாக இருக்கும் என்பதை சரியாக தேர்வு செய்வது அவசியம் என்கிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க(காட்சியா) உறுப்பினர் பாலசுப்ரமணியன்.

அவர் நம்மிடம் கூறியதாவது...

ஒரு வீட்டை கட்டினால் அதற்கு என்ன வண்ணம் அடிக்க வேண்டும் என்பதை, வரைபட தயாரிப்பு நிலையிலேயே முடிவு செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. புதிய வீட்டுக்கான கட்டட வரைபடம் தயாரித்தவுடன், அதன் விபரங்களை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்து, 3டி முறையில் வீட்டின் தோற்றம் சரிபார்க்கப்படும்.

இதில் வீட்டின் ஒவ்வொரு பாகமும் கட்டி முடித்த பின்பு, எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் வீட்டின் எந்த பாகத்துக்கு என்ன வண்ணம் அடித்தால் சரியாக இருக்கும் என்பதையும், இதில் வெள்ளோட்டம் பார்க்க முடியும்.

புதிய வீட்டில் ஒரு வண்ணத்தை தேர்வு செய்து, அதையே அனைத்து பகுதிகளுக்கும் அடிப்பது என்ற வழக்கம் இன்னும் பலரிடம் காணப்படுகிறது.

இதில், நடைமுறை எதார்த்த நிலவரத்தை புரிந்து கொண்டு, ஒரு வண்ணத்தை தேர்வு செய்தாலும் அதனை பல்வேறு வகைகளில் வேறுபடுத்தி பயன்படுத்தும் வழிமுறைகள் வந்துள்ளன.

உதாரணமாக, பச்சை நிறத்தை பிரதானமாக தேர்வு செய்தால், அதன் வெளிர் வண்ணம் என்ற அடிப்படையில் நான்கு, ஐந்து 'ஷேடு'கள் தற்போது கிடைக்கின்றன. இதை சரியாக தேர்வு செய்து பயன்படுத்தினால், ஒரே வண்ணத்தை பயன்படுத்தி வீட்டை வெவ்வேறு வகையில் அலங்கரிக்கலாம்.

இதில், ஒரு வண்ணத்துக்கு பதில் இரண்டு வண்ணங்களை தேர்வு செய்யும் போதும், அதில் பல்வேறு சிறப்பு 'ஷேடு'களை பயன்படுத்தும் போதும், வீட்டின் உட்புறத் தோற்றம் அழகாக மாறிவிடும்.

வீட்டிற்கு அடர் மட்டும் வெளிர் நிலையில் கிடைக்கும், பல்வேறு 'ஷேடு'களை சரியான திட்டமிட்டு பயன்படுத்தினால், குறைந்த அளவு வண்ணங்களுடன், எளிய முறையில் அழகாக மாற்றலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us