sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் 'சங்கம்'

/

நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் 'சங்கம்'

நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் 'சங்கம்'

நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுக்கும் 'சங்கம்'


ADDED : ஜூன் 07, 2025 01:09 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடுக்குமாடி குடியிருப்புகளில் சங்கம் பதிவு என்பது அவசியமான ஒன்று. இதற்கென, தமிழ்நாடு அபார்ட்மென்ட் உரிமையியல் சட்டம், 2022 மற்றும் விதிகளை உருவாக்கியது. ஆனால், இச்சட்டம் 2024ல்தான் அமல்படுத்தப்பட்டது.

பதிவு பெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:

அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள பொது இடங்களையும், வசதிகளையும் சங்கம் வாயிலாக பராமரிக்கும் நடைமுறை இருந்துவருகிறது. இந்த சங்கங்களை எவ்வாறு அமைப்பது, பதிவு செய்வது என்பது குறித்து அரசு, தமிழ்நாடு அபார்ட்மென்ட் உரிமையியல் சட்டம், 2022 மற்றும் விதிகளை உருவாக்கி தந்துள்ளது.

இதன் வாயிலாக, பிரச்னைகள் இல்லாமல் நிம்மதியான வாழ்வுக்கு வழி பிறந்துள்ளது. நான்கு மற்றும் அதற்கும் கூடுதலாக அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட கட்டடங்கள் கட்டாயம் சங்கம் பதிவு செய்வது அவசியம். இதில் பதிவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது.

புதிய கட்டுமானங்களுக்கு இரண்டு கட்ட பதிவு அவசியமாகிறது. முதலில் கட்டடத்தில் உள்ள பொது இடங்கள், வசதிகள், உரிமையாளர்கள், அபார்ட்மென்ட் பரப்பு, பிரிபடாத நில பங்கு, வாக்கு சதவீதம் பற்றிய விவரங்களை படிவம் 'அ' வாயிலாக உறுதி ஆவணமாக மாவட்ட சங்க பதிவாளரிடம் கட்டணம் செலுத்தி பதிவிட வேண்டும்.

பொது வசதிகள் எவர் வசம் உள்ளதோ, அவரே உறுதி ஆவணம் அளிக்க வேண்டும். பெரும்பான்மையான உரிமையாளர்கள் கையெழுத்திட வேண்டும். அரசே மாதிரி 'பை லா' உருவாக்கி அளித்துள்ளதால் இது மிகவும் எளிது. பதிவுக்கு பின் சான்று அளிக்கப்படும்.

கோவையை பொறுத்தவரை வடக்கு, தெற்கு என, இரு பதிவு அலுவலகங்கள் உள்ளன. வடக்கு அலுவலகம் சிரியன் சர்ச் ரோட்டிலும், தெற்கு அலுவலகம் கிராஸ் கட் ரோட்டிலும் உள்ளன. இங்கு பொது மக்கள் அணுகலாம்.

அனைத்து பதிவுகளும், இணையதளம் வாயிலாகவே நடக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. எனவே, தளம் தயாராகும் வரை 'மேனுவல்' முறையில் நேரடியாக பெற்று பதிவிடுமாறு, பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பதிவு கட்டணத்தை, tnreginet.gov.in எனும் பதிவுத்துறை இணையதளம் அல்லது karuvoolam.tn.gov.in எனும் கருவூல இணையதளம் வழியாகவும் செலுத்தலாம். மக்கள் அலைச்சலை தவிர்த்து இதன் வழியாக பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us