/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
துருப்பிடிக்காத 'மல்டி லேயர்' குடிநீர் குழாய் ஐந்து அடுக்கு உலோகம் தருகிறது பாதுகாப்பு
/
துருப்பிடிக்காத 'மல்டி லேயர்' குடிநீர் குழாய் ஐந்து அடுக்கு உலோகம் தருகிறது பாதுகாப்பு
துருப்பிடிக்காத 'மல்டி லேயர்' குடிநீர் குழாய் ஐந்து அடுக்கு உலோகம் தருகிறது பாதுகாப்பு
துருப்பிடிக்காத 'மல்டி லேயர்' குடிநீர் குழாய் ஐந்து அடுக்கு உலோகம் தருகிறது பாதுகாப்பு
ADDED : ஜன 24, 2026 05:17 AM

கட்டுமான துறையில் நவீனங்கள் புகுத்தப்பட்டு வருவது வேலைபாடுகளை எளிமையாக்குகின்றன. இத்துடன் கட்டுமான பொருட்களின் ஆயுட்காலம், தரம் ஆகியன நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைகின்றன. குறிப்பாக, கட்டடத்துக்கு பாதுகாப்பு தரும் அம்சங்கள் அதிகம் அறிமுகம் செய்யப்படுகின்றன.
வெளிநாடுகளில் புகுத்தப்படும் தொழில்நுட்பங்கள், இன்று நம் நாட்டிலும் செயல்முறையாக மாறிவிட்டது கட்டுமான துறைக்கு வலிமையை மேலும் கூட்டுகிறது. குடிநீர் வினியோகிக்கும் குழாய்களை பொறுத்தவரை பி.வி.சி., காப்பர், கால்வனைஸ்டு ஸ்டீல் என பல வகைகளில் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவம் உண்டு.
அதற்கேற்ப விலையிலும் மாற்றம் உள்ளது. அந்த வரிசையில் குடிநீர் வினியோகத்துக்கான 'மல்டி லேயர் காம்போசிட் பைப்'(எம்.எல்.சி.பி.,) பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது.
எம்.எல்.சி.பி., என்பது ஐந்து அடுக்குகளை கொண்ட மேம்படுத்தப்பட்ட உலோக பொருட்களால் ஆன குழாய்களாகும். குழாய்களுக்கு உட்புறம் உள்ள அடுக்குகள், குடிநீருக்கு பாதுகாப்பாக இருக்கும். மாசுவை தடுக்கும்.
இவ்வகை குழாய்கள், 'கிரிப்ளிங்' முறையில் இணைக்கப்பட்டு நீடித்து உழைக்கக்கூடியவைகளாக உள்ளன. இவ்வகை குழாய்கள் துருப்பிடிக்காது, அரிக்காது, பராமரிப்பு செலவும் குறைவாக இருக்கும் என்கின்றனர் பொறியாளர்கள்.

