/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோரின் குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோரின் குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோரின் குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோரின் குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
ADDED : மார் 03, 2024 08:49 AM

சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் தான் தீர்வாக உள்ளன. இத்தகைய திட்டங்களில் வீடு வாங்குவதில் உள்ள நடைமுறை, பயன்பாட்டில் உள்ள வழிமுறைகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
பொதுவாக, ஒருவருக்கு சொந்தமான வீட்டை அல்லது நிலத்தை வாங்கி, தன்னுடையதாக்கி அதை பயன்படுத்துவது தான் மக்களின் பழக்கமாக உள்ளது.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது எது நமக்கு சொந்தம், எது பொதுவானது என்பதை புரிந்துக்கொள்வதில் குழப்பம் வருகிறது.
தொடர்ந்து பல தலைமுறைகளாக கிராமங்களில் தனி வீடுகளில் வசித்து வந்தவர்கள், நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறும்போது சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, அடுக்குமாடி திட்டங்களில் நிலம் மீதான உரிமை எவ்வாறு பங்கிடப்படுகிறது என்பதில் பெரிய அளவில் குழப்பம் உள்ளது.
அடுக்குமாடி திட்டத்தில் நான் வாங்கும் வீட்டுக்கு என் பெயரில் பட்டா கிடைக்குமா என்பது தொடர்பாகவும் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அடுக்குமாடி திட்டங்களில் ஒரு நிலம் எல்லை வரையறை இன்றி, அதில் வீடு வாங்கும் அனைவருக்காகவும் பங்கிடப்படுகிறது.
இது நிலத்தின் பிரிபடாத பங்கு அதாவது யு.டி.எஸ்., என்று குறிப்பிடப்பட்டு வீடு வாங்குவோர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.
யு.டி.எஸ்., பாகத்தின் அளவு அடிப்படையில் கூட்டு பட்டா வழங்க வாய்ப்பு உள்ளது என்பதை வீடு வாங்கும் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது வீட்டின் அளவு மட்டுமின்றி, அதில் உங்களுக்கான யு.டி.எஸ்., பாக அளவு என்ன, என்பது தொடர்பாக விபரங்களை தெளிவாக விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக, அத்திட்டத்தில் மொத்தம் உள்ள வீடுகள் எண்ணிக்கை என்ன, யு.டி.எஸ்., பங்குகள் எண்ணிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
வீடுகளின் எண்ணிக்கையை காட்டிலும் கூடுதலாக யாருக்காவது யு.டி.எஸ்., பங்கு அளிக்கப்பட்டு இருந்தால் அதில் ஏதோ குளறுபடி இருக்கிறது என்பதை புரிந்து 'அலர்ட்' ஆவது நல்லது.
வீடுகளை விட கூடுதல் எண்ணிக்கையில் யு.டி.எஸ்., பாகம் பிரிக்கப்பட்டு இருந்தால் அதில் பிற்காலத்தில் தேவையில்லாத பல்வேறு புதிய பிரச்னைகள் வரும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும், ஒவ்வொரு வீட்டின் பரப்பளவில், 50 அல்லது, 40 சதவீதமாக யு.டி.எஸ்., பங்கு அளவு இருக்க வேண்டியது அவசியம்.
ஆனால், இது வீட்டின் பரப்பளவில், 10 அல்லது, 20 சதவீதமாக இருந்தால், பிற்காலத்தில் அந்த வீட்டை விற்பனை செய்யும் போது பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

