PUBLISHED ON : செப் 29, 2024

செப்டம்பர் 22: தமிழக உணவு பாதுகாப்பு துறையினரின் ஆய்வுகளில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், 'விலங்குகளின் கொழுப்பு கலந்த இனிப்புகள் தமிழகத்தில் கிடையாது' எனும் அரசின் உத்தரவாதத்தை நம்புகிறேன்!
செப்டம்பர் 23: 'சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்குநாள் அவருக்கு கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளன' எனும் நம் முதல்வரின் பதிவில் என் கண்கள் பனித்தன; இதயம் இனித்தது!
செப்டம்பர் 24: ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும், மக்கள் வரிப்பணத்தை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வாரியிறைத்த பின்னும், வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மீட்பு சாதனங்களோடு தயாராக இருக்கும் எம் அரசு வாழ்க!
செப்டம்பர் 25: குற்றவாளி பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்யப் போகையில், மறைத்து வைத்திருக்கும் அந்த ஆயுதத்தால் குற்றவாளி தன்னை தாக்கக்கூடும் என்று சிந்திக்காத போலீஸ், 'என்கவுன்டர் போலீஸ்' அந்தஸ்து பெறுகிறார்!
செப்டம்பர் 26: 'வெறுப்பை அன்பால் மட்டுமே வெல்ல முடியும்' என்று ஜம்மு - காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் ஓங்கி ஒலிக்கும் ராகுல் காந்தியின் குரல்தான், விநாயகர் சதுர்த்திக்கான வாழ்த்து எதிர்பார்த்து ஏமாந்த தமிழக மனங்களுக்கு மிகச்சிறந்த மருந்து.