PUBLISHED ON : நவ 21, 2021

அதிகமாக அசைவ உணவு சாப்பிடுவதால், 10 வயதிற்கு முன்பே வயதிற்கு வருவதுடன், மாதவிடாய் கோளாறுகள், கருக்குழாயில் நீர்க்கட்டிகள் வருகின்றன. இறைச்சியில் உள்ள 'டை எத்தில் ஸ்டில்போஸ்டிரோல்' என்ற வேதிப்பொருளே காரணம். இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி, ஆடு, மாடுகளுக்கு உடல் எடை அதிகரிக்க, இது தீவனத்தில் கலக்கப்படுகிறது.
தினமும் அசைவம் சாப்பிடும் பெண்களுக்கு, சைவ உணவு சாப்பிடும் பெண்களை காட்டிலும், நான்கு மடங்கு அதிகமாக மார்பக புற்றுநோய் வருகிறது. தாவர உணவில் உள்ள நார்ச்சத்து, குடலை நன்கு சுத்தம் செய்கிறது.
கொழுப்பு அதிகம் உள்ள மாமிசம், குடலின் செயல்பாட்டை குறைத்து, மலச்சிக்கல், குடல் கேன்சர் வருவதற்கு வாய்ப்பளிக்கிறது. மூட்டு வலி உள்ளவர்களுக்கு, மாமிச உணவை தவிர்த்து, தாவர உணவு கொடுத்த போது மூட்டு வலியும், வீக்கமும் குறைந்து, நோயும் கட்டுக்குள் இருந்தது தெரிந்தது.
ஆதாரம்: அமெரிக்காவின் 'வேக் ஸ்டேட்' பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி மையம்.
