sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்

/

இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்

இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்

இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்


PUBLISHED ON : செப் 27, 2015

Google News

PUBLISHED ON : செப் 27, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதனின் ஆரோக்கியமான வாழ்வு, உண்ணும் உணவிலும், நல்ல எண்ணத்தாலேயுமே அமையும். சத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல் இருக்க முடியும். ஒவ்வொரு காய்கறிகளும், பலவிதமான சத்தை தரவல்லது.

இதில், சுவையான காய்கறிகளில் ஒன்றான, புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இதனை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்த வேண்டும். முதிர்ந்த புடலங்காய் கசக்கும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தல் அவசியம். இதில், புரோட்டின் 0.5 கிராம், கொழுப்புச்சத்து 0.3 கிராம் மற்றும் ஓரளவு விட்டமின் சி சத்தும் அடங்கியுள்ளன. புடலங்காய் சர்க்கரை நோய்க்கான மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற வல்லது.

புடலங்காயில் ஆல்கலாய்ட்ஸ், கிளைகோஸைட்ஸ், ப்ளேவனாய்ட்ஸ் ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன. விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது, புடலங்காயை வாங்கி கொட்டைகளை நீக்கி, கறியாக சமைத்து சாப்பிட்டால் போதும். புடலங்காய் இதயத்துக்கு பலமும், நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயம் பலவீனமடைவது இயற்கையாகும். இந்நிலைக்கு ஆளானோர், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

காலையில் புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து சுத்தம் செய்து, சாறாக பிழிந்து, வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டால் இதயம் சமநிலை பெறும்; இதயமும் பலம் பெறும்.






      Dinamalar
      Follow us