sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சர்க்கரை கோளாறும் சில ஆய்வு முடிவுகளும்...

/

சர்க்கரை கோளாறும் சில ஆய்வு முடிவுகளும்...

சர்க்கரை கோளாறும் சில ஆய்வு முடிவுகளும்...

சர்க்கரை கோளாறும் சில ஆய்வு முடிவுகளும்...


PUBLISHED ON : ஆக 28, 2024

Google News

PUBLISHED ON : ஆக 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மூன்று மாதங்களுக்கு ஒரு முறை,'ஹெச்பிஏ1சி' பரிசோதனை செய்து,ரத்த சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்வது, எதிர் காலத்தில் சர்க்கரை கோளாறு வராமல் தடுத்துக் கொள்ள உதவும்.

இந்த பரிசோதனை செய்வதற்கு, சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பின் என்று எந்த நிபந்தனையும் கிடையாது; எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதில், ரத்த சர்க்கரையின் அளவு, 9க்கு மேல் இருந்தால், பல உடல் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

இது, 6.5 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக இருந்தால், சர்க்கரை கோளாறால் வரும் உடல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். 5.7 - 6.4 சதவீதம் இருந்தால், சர்க்கரை வருவதற்கான முந்தைய நிலையில் இருப்பதாக அர்த்தம். 40 சதவீதம் பேர், இந்த நிலையிலேயே உள்ளனர். இவர்கள், 5 - 7 ஆண்டுகளில் சர்க்கரை நோயாளிகளாக மாறி விடுகின்றனர். இந்த அளவு இருப்பது உறுதியானதும், உணவு, உடற்பயிற்சி இவற்றில் கவனமாக இருந்தால், சர்க்கரை வராமலேயே தவிர்க்க முடியும்.

இவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், சர்க்கரை நோயாளிகளாக மாறி விடுகின்றனர். இது தான், ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம்.

சர்க்கரை கோளாறு இல்லாத குடும்பப் பின்னணி இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 40 சதவீத இந்தியர்கள், சர்க்கரை கோளாறு வருவதற்கான அபாயத்தில் உள்ளனர். முறையான உடற்பயிற்சி செய்தால், சர்க்கரை கோளாறு வராமலேயே தடுக்கலாம்.

ரிவர்ஸ் டயாபடிக்' சாத்தியமா?

ஆண்டுதோறும் மக்கள் தொகை 2.5 கோடி நம் நாட்டில் அதிகரிக்கிறது. இன்று, நடுத்தர, அதற்கும் கீழ் உள்ள மக்களிடையே உடல் பருமன் அதிகரித்து உள்ளது. எனவே, பணக்காரர்களின் நோயாக இருந்த சர்க்கரை கோளாறு, இன்று எல்லா தரப்பு மக்களுக்கும் உள்ளது. பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்களிடையே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து இருப்பதால், சர்க்கரை கோளாறு வெகுவாக குறைந்துவிட்டது. பதிலாக, நடுத்தர, அதற்கும் கீழ், இளம் வயதினரிடம் குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது.

காற்று மாசு ஒரு காரணம். கடந்த காலங்களில் போகி அன்று தான் காற்று மாசு இருக்கும். இன்று ஆண்டு முழுதும் உள்ளது. காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள், சுவாசத்தின் வாயிலாக சென்று, நுரையீரலை மட்டுமல்ல, ரத்தத்தில் கலந்து கணையத்தை சிதைத்து, அதன் செயல்பாட்டை குறைக்கிறது.

கொரோனா பாதிப்பின் போது, ஸ்டிராய்டு மருந்துகளின் பயன்பாடு, கொரோனா வைரஸ் நேரடியாக கணையத்தில் உள்ள பீட்டாசெல்களை சிதைத்து, சர்க்கரை கோளாறை உண்டு பண்ணியது.

பாலிஷ் செய்த அரிசி, மைதா, வெள்ளை சர்க்கரை, பால் என்று வெண்மை நிறத்தை தவிர்த்து, நாம் சாப்பிடும் தட்டு, வண்ணங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா, சாம்பல் என்று காய்கறிகள், பழங்கள், தானியங்களில் உள்ள ஒவ்வொரு நிறத்திற்கும் ஒருவிட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. படிப்பு, தேர்வு, வேலை என்று எதிலும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.

'ரிவர்ஸ் டயாபடிக்' சாத்தியமா?

சமூக வலைதளங்களில் இது மிகைப்படுத்தப்படுகிறது. சர்க்கரை கோளாறை இயல்பு நிலைக்கு அதாவது, ரிவர்ஸ் செய்ய வேண்டும் என்றால், அதற்கு 'ஏ, பி, சி, டி, இ' என்ற ஐந்து விஷயங்கள் இருக்க வேண்டும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவிற்றில் சமீபத்தில் வெளியான ஆய்வுகளில், வெளியான முடிவுகள்:

ஏ - ஹெச்பிஏ1சி

மூன்று மாத ரத்த சர்க்கரையின் சராசரி அளவு, 5 - 6 சதவீதம். சர்க்கரை கோளாறில் அதிகபட்சம் 9 சதவீதம் வரை இருந்தால் ரிவர்ஸ் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு மேல் இருந்தால் ரிவர்ஸ் செய்வது சிரமம்.

பி - உடல் எடை

அதிக உடல் எடையை குறைக்கலாம். இதனால் ரிவஸ் செய்வதற்கு வாய்ப்பு அதிகம். உடல் எடை குறைவாக இருப்பவரால் என்ன செய்ய முடியும்?

சி - சி பெப்டைன் பரிசோதனை

இன்சுலின் அளவு உடலில் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் பரிசோதனை. இயல்பான அளவான 100 சதவீதத்தில் 30 சதவீதம் குறைவாக இருந்தால் மட்டுமே சாத்தியம். வெறும் 40 சதவீதம் இருந்தால் ரிவர்ஸ் பண்ண முடியாது.

டி - எத்தனை ஆண்டுகள்

ஐந்து ஆண்டுகளாக சர்க்கரை கோளாறு இருந்தால் பரவாயில்லை. 15 ஆண்டுகளாக இருந்தால் கணைய செல்கள் செயலிழந்து விடும். அந்த நேரத்தில் ரிவர்சலுக்கு முயற்சி செய்ய முடியாது.

இ - உற்சாகம்

சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயிற்சி செய்வது. காரணம், இது போன்ற முயற்சியில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று கார்போஹைட்ரேட் உணவுகளை நிறுத்தி, காய்கறிகள், சில நேரங்களில் 200 கலோரி சத்து பானம் மட்டும் மதிய, இரவு உணவுக்கு தருகின்றனர். உணவு கட்டுப்பாடு ரத்த சர்க்கரையை ரிவர்சல் செய்யும்; சிறிது சறுக்கினாலும் திரும்ப வந்து விடும்.

ஐந்த 'எஸ்'

ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க, அதனுடன் தொடர்புடைய ஐந்து, 'எஸ்'களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

'எஸ் 1' - சர்க்கரை

சர்க்கரையில், குறிப்பாக வெள்ளைச்சர்க்கரையை, முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம்.



'எஸ் 2' - சிகரெட்


புகை பிடிக்கவே கூடாது. அந்த பழக்கம் இருப்பவர்கள், முற்றிலும் அதிலிருந்துமீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

'எஸ் 3' -91. 'சால்ட்' எனப்படும் உப்பு

எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ, அந்த அளவு குறைவாக உப்பை பயன்படுத்த வேண்டும்.

'எஸ் 4' - 'ஸ்மைல்' என்ற புன்னகை

எப்போதும் அமைதியான மனநிலையில், எல்லாவற்றையும் புன்னகையுடன் எதிர்கொள்ள பழக வேண்டும்.

'எஸ் 5' - 'ஸ்லீப்' அதாவது துாக்கம்

தனி நபரின் தேவையை பொறுத்து, 6 - 8 மணி நேரம் வரை, ஆழ்ந்த துாக்கம் மிகவும் அவசியம்.

இந்த ஐந்து எஸ்களை பின்பற்றினால், ரத்த சர்க்கரை நம் கட்டுக்குள் இருக்கும்.






      Dinamalar
      Follow us