நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆறு மாத குழந்தைகளுக்கு, சளி, ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, மூக்கடைத்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது, நாம் முதலில் கையில் எடுக்கும் மருந்து தைலம் தான். ஆனால், குழந்தைகளுக்கு இதை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சாதாரண தைலங்களில், கற்பூரம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது அதிகரிக்கும் போது, பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிக கற்பூர மூலப்பொருளை உள்ளடக்கிய தைலத்தை, குழந்தைகளுக்கு தடவும் போது, சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு சிவக்க வாய்ப்புகள் உள்ளது.
மருத்துவரின் உரிய ஆலோசனை இல்லாமல், எதையும் மேற்கொள்ளக் கூடாது.