sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/"வாஸ்குலர் ஏஜ்' என்றால் என்ன தெரியுமா?

"வாஸ்குலர் ஏஜ்' என்றால் என்ன தெரியுமா?

"வாஸ்குலர் ஏஜ்' என்றால் என்ன தெரியுமா?


PUBLISHED ON : மே 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2011


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இருதய நோய் வராமல் இருக்க உணவில் எவற்றை தவிர்க்க வேண்டும்?

எஸ்.சீதாராமன், மதுரை:

மாரடைப்பு என்பது ரத்தக்குழாய் நோய். உடலில் உள்ள ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே, கொடூர ரத்தக் குழாய் நோய்களான பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்றவற்றை தடுக்கலாம். தற்போதுள்ள நவீன மருத்துவத்தில், உங்கள் உண்மையான வயதைவிட, ரத்தக் குழாயின் வயதே (வாஸ்குலர் ஏஜ்) முக்கியத்துவம் பெறுகிறது. ரத்தக்குழாய் நோய்க்கு வாழ்க்கை முறை மாற்றமே அத்தியாவசியமானது. குறிப்பாக மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி, சரியான அளவு ஓய்வு ஆகியவை முக்கியமானவை. உணவுப் பழக்கத்தை பொறுத்தவரை, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது அவசியம். உப்பு, சர்க்கரையை நன்கு குறைக்க வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் உண்பது, அரிசி உணவை குறைப்பது, நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்ப்பது ஆகியவை முக்கியம். இந்த பழக்கங்களை கடைபிடித்தால் பெருமளவு ரத்தக்குழாய் நோய்களை தடுக்கலாம்.



எனக்கு மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது ரத்தக் கொதிப்பும் வந்துவிட்டது. இது சர்க்கரை நோயைவிட மோசமான வியாதியா? வி.சீனிவாசன், நத்தம்:


சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் மிகக் கொடூரமான வியாதிகள். உடல் உறுப்புகளை, பல வகைகளில் பாதிக்கும் தன்மை படைத்தவை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தக் கொதிப்பு ஏற்பட்டால், அதை சரியாக கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியம். இதற்கு தற்போது, நவீன மருந்து வகைகள் உள்ளன. சர்க்கரை நோயுடன், ரத்தக்கொதிப்பும் சேர்ந்துவிட்டால், ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பதற்கு பதில், ஒன்றும், ஒன்றும் 11 என்றாகி விடும். அதாவது நம் உடலை அது பல வழிகளில் பாதிக்கச் செய்கிறது. ஆகவே, சர்க்கரையையும், ரத்தக் கொதிப்பையும் கட்டுப்பாட்டில் வைத்து, வாழ்க்கை முறை மாற்றத்துடன், சரியான மருந்தையும் எடுத்தால், இந்நோய்களின் பாதிப்பை தடுக்க முடியும்.


கூணூடிட்ஞுtச்த்டிஞீடிணஞு என்ற மருந்து இருதய நோய்க்கு நல்லதா? சி.ராமலிங்கம், திண்டுக்கல்:

கூணூடிட்ஞுtச்த்டிஞீடிணஞு என்பது பல ஆண்டுகளாக இருதய மருத்துவத்தில் உபயோகப்படுத்தும் மருந்தாகும். இருதய செல்களுக்கு, பல வகைகளில் பயன் தருகிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது. இருதயத்தின் பம்பிங் திறனை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இருதயத்திற்கு, இது ஒரு நல்ல டானிக் ஆக உள்ளது. நெஞ்சு வலி உள்ளவர்களுக்கும், இம்மருந்து நல்ல பலனளிக்கிறது.

எனக்கு நான்கு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. நான் எந்த மாதிரியான பழங்களை தவிர்ப்பது நல்லது? பி.பார்த்தசாரதி, விருதுநகர்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா போன்றவற்றை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் முக்கனிகளான மா, பலா, வாழைப் பழங்களை அவசியம் தவிர்த்தாக வேண்டும். சத்தான காய்கறிகளையும் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை குறைப்பது மிக நல்லது.

டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us