sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

தலையாய பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகள்!

/

தலையாய பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகள்!

தலையாய பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகள்!

தலையாய பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகள்!


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம் வயதினருக்கு இருக்கும் தலையாய பிரச்னையே, முடி உதிர்வதுதான். முடியை காப்பாற்றுவதற்கு பலரும் படும்பாடு சொல்லி மாளாது. முடி உதிர்வுக்கு பல காரணங்கள் உள்ளன.

பூஞ்சைத் தொற்று கிருமிகளாலும், ஊட்டச்சத்து இல்லாததாலும், சுகாதாரம் இல்லாததாலும், இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும், தோல் அழியும் நோய் போன்றவற்றாலும் முடி உதிர்தல் ஏற்படும். எனினும், பொடுகு பாதிப்பே, பலருக்கும் முடி உதிர்வதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி உதிரும் பிரச்னை வரும். முடி உதிராமல் இருக்க, மூலிகை மருத்துவம் நல்ல பயன் தரும்.

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சலாம். இந்த எண்ணெயை முடிக்கால்களில் படுவதுபோல் தேய்க்க வேண்டும்.

20 நிமிடம் வரை விடலாம். பொடுகு அதிகம் உள்ளவர்கள் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காயை புளிக்காத மோருடன் கலந்து தேய்த்துக் குளிக்கலாம். முடி உதிராமல் இருக்க, பாலும், எள்ளுருண்டையும் சாப்பிடலாம்.

எக்காரணம் கொண்டும் பிறர் பயன்படுத்திய சீப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும். முடியைக் குறைவாக வெட்ட வேண்டும். ஒரு சிலருக்குத் தலையில் எண்ணெய் தேய்த்தால் ஜலதோஷம் வரும்.

அவர்கள், கரண்டியை லேசாகச் சூடு செய்து, அதில் எண்ணெயை விட்டுப் பிறகு தேய்க்கலாம்.

அப்படியும் ஜலதோஷம் வந்தால், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்து தயாரித்த எண்ணெயை பயன்படுத்தலாம்.

அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டுப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள். இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்துவிடும்.

தெளிந்த எண்ணெயைத் தனியாக பிரித்து சேமியுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால் முடி உதிர்வது நின்றுவிடும்.

வெந்தயம், குன்றிமணி இரண்டையும் பொடி செய்து, ஒரு வாரம் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். அவுரி, கரிசாலை, கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, தினமும் மூன்று வேளை 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும்; முடி உதிர்தல் பிரச்னை குறையும்.






      Dinamalar
      Follow us