தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/வாழைப்பழம் ஒரு முழு உணவு!

வாழைப்பழம் ஒரு முழு உணவு!

வாழைப்பழம் ஒரு முழு உணவு!


PUBLISHED ON : ஆக 23, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைப்பழம், உலகின் பல பாகங்களில் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் என, ஐரோப்பிய புராணக் கதைகள் கூறுகின்றன. ஆப்பிள் பழத்தில் காணப்படுவது போன்று, வாழைப் பழத்திலும் வைட்டமின் 'சி' காணப்படுகிறது.

இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. காரச் சத்து அதிகமாக இருப்பதால், உண்பவர்களின் உடலிலுள்ள, காரச்சத்தை பத்திரப்படுத்தப் பயன்படுகிறது. ஏனைய பழங்களை விட, இதனுடைய உணவு தரும் சூட்டின் அளவு அதிகம். எனவே தானியத்திற்குப் பதிலாக, இதை உணவாகக் கொள்ளலாம். இதிலுள்ள சர்க்கரைச் சத்து குடல் கிருமிகளைக் குறைக்கும் சக்தி வாய்ந்தது. ஆகவே இதை கிருமி நாசினியாகப் பயன்படுத்தி குடல் நோய்களை அகற்றலாம்.

கனிந்த பழத்துடன் சிறிது புளியையும், உப்பையும் கலந்து பிசைந்து உட்கொண்டால், சீதபேதி தீரும். சிறு குழந்தைகளுக்கு சீதபேதி ஏற்பட்டால், பழத்தை நன்றாகப் பிசைந்து கூழாக்கிக் கொடுத்தால் நோய் தீரும். குன்மநோய், குண்டிக்காய் வீக்கம், கீல்வாதம், டைபாய்டு காய்ச்சல் முதலிய நோய்க் காலங்களில், வாழைப்பழத்தை அதிகமாகப் பயன்படுத்தி குணமடையலாம்.

குடற்புண் நோயாளிகளுக்கு இது நல்ல உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் உள்ள நோயாளிகளுக்கு, இப்பழம் ஒரு நல்ல மருந்தாகும். இளகிய மலம் உள்ளவருக்கும் இது நல்ல உணவாகும். வாழைப்பழத்தில் புரதச்சத்து அதிகமாக இல்லாததால், பாலுடன் கலந்து உண்பதால் அது முழு உணவாகிறது. காலையில் பாலும், பழமும் சாப்பிடுவது நல்ல பழக்கம். பாலையும், வாழைப்பழத்தையும் கலந்து உண்டு, ஒருவர் பல காலம் வாழலாம். உண்பதற்கு பழம் நன்கு கனிந்திருக்க வேண்டும்.

பழத்தின் தோல் மஞ்சள் நிறமாக இருந்தால் மாத்திரம் போதாது. நன்கு கனியாத பழங்கள் ஜீரண உறுப்புகளுக்கு கடினமாக இருப்பதோடு, அதிலுள்ள சர்க்கரைச் சத்தும் ஜீரணமடையப் பக்குவப்படாத நிலையில் இருக்கும். எனவே, நன்கு கனியாத பழங்களை உண்ணக்கூடாது. பழத்தின் தோலில் சில ரசாயனப் பொருள்கள் உள்ளன. தோலில் வெடிப்பு ஏற்படாத வரை, உள்ளிருக்கும் சதையை நன்கு பாதுகாக்கும் தன்மை மேற்சொன்ன ரசாயனப் பொருள்களுக்கு உண்டு; அதனால், கிருமிகள் அண்டாது.

பழத்தின் தோலை நீக்கி வெயிலில், உலர வைத்து தூள் செய்து பல காலம் பத்திரப்படுத்தலாம். அப்பழத்தூளை பாலில் கலந்து, உண்பதால் அது முழு உணவாகிறது; சுவையாகவும் இருக்கும். பழத்தூளினால் ரொட்டி செய்து, குடற்புண் நோய் உள்ளவர்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் கொடுக்கலாம்.

வாழைப்பழங்களில் செவ்வாழைப்பழம் மிகவும் சத்துமிக்கது. உடல் மெலிந்தவர்கள், நோயால் படுத்து உடல் மெலிந்தவர்கள், தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு படுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us