sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மருந்தாகும் பாகற்காய்!

/

மருந்தாகும் பாகற்காய்!

மருந்தாகும் பாகற்காய்!

மருந்தாகும் பாகற்காய்!


PUBLISHED ON : அக் 25, 2015

Google News

PUBLISHED ON : அக் 25, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரபரப்பான வாழ்வில், உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் சாப்பிடும் போது, உடல் ஆரோக்கியம் நிலையாக இருக்கும். இதில், பாகற்காய், உடலுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

சிலர் இதனை கசப்பு காய் என்று ஒதுக்கி வைப்பது வழக்கம். குழந்தைகளும் தயக்கம் இல்லாமல் பாகற்காயை சாப்பிட வேண்டும். கசப்பு சுவை மிகுந்த இந்த பாகற்காயை, குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில், துவையல், வத்தல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதில், வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா- கரோட்டின் போன்ற ப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

சுவாசக்கோளாறுகள் நீங்கும்: பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில், மிகச்சிறந்த

நிவாரணியாகப் பயன்படுகிறது.

கல்லீரலை வலுப்படுத்துதல்: தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய் சாற்றை அருந்தி வந்தால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், இதன் பலனைக் காணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி: பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

பருக்கள்: பாகற்காயை உண்டு வந்தால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை நீங்கும். பாகற்காயை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில், 6 மாதம் அருந்தி வந்தால், பலனை கண்கூடாக காணலாம்.

நீரிழிவு நோய்: டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள, சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப் பொருள், இன்சுலின் போல செயல்பட்டு, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

மலச்சிக்கல்: பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது. சிரமமின்றி மலம் கழிக்க முடிகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் பெருகும்.






      Dinamalar
      Follow us