sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதுவே சரியான ஆரோக்கியம்

/

உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதுவே சரியான ஆரோக்கியம்

உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதுவே சரியான ஆரோக்கியம்

உடலும் மனதும் நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதுவே சரியான ஆரோக்கியம்


PUBLISHED ON : செப் 14, 2025

Google News

PUBLISHED ON : செப் 14, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெயாமகேஷ்! கோவையை சேர்ந்தஉடல் இயக்க தெரப்பி (body sculpting therapy) பயிற்சியாளர். 'திருமதி இந்தியா' பட்டம் வென்ற மாடல், தனது 56 வயதிலும் பிட்டாக இருப்பது எப்படி?

அவரிடமே கேட்டு விட்டோம்!

வயது எதுவாக இருந்தாலும், உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். அதை விட அவசியம், மனதை அமைதியாக வைத்துக்கொள்வது. தற்போதைய சவால்கள் நிறைந்த உலகில் இது சிரமமான விஷயம் தான். நமக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கும், புதிதாக கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். ஒரு சில நபர்கள் உடன் இருப்பது, நமக்கு எப்போதும் ஒரு எதிர்மறை எண்ணங்களை, அழுத்தங்களை கொடுக்கும். அதுபோன்ற நபர்களிடம் நேரம் செலவிடுவதை ஒரு கட்டத்தில் முற்றிலும் தவிர்த்து விட்டேன். சரியான நேரத்தில் உணவு, துாக்கம், மல்டி வைட்டமின் மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையின் படி எடுத்துக்கொள்வேன். வைட்டமின் பி, டி போன்ற சத்துக்களை செக் செய்து, 40 வயதுக்கு மேல் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரம் ஸ்ரெட்ச் தெரப்பி, முக ஸ்ரெட்ச் தெரப்பி செய்துகொள்வேன். அதிகாலையில் ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடுவதும், தியானம் செய்வதும் பிடிக்கும். அதிகாலையில், 4:00 மணிக்கு எழுவது பல நேர்மறையான எண்ணங்களை தருகிறது. வேலைகளை முடித்த பின், சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்வேன். மொபைல் போனை அத்தியாவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்துவேன். வெளியூர், சுற்றுலா செல்லும் போதும், நேரம் கிடைக்காத சூழலிலும், உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனாலும், சாப்பிட்ட பின் அரை மணி நேரம் நடந்தபடி இருப்பேன். உடலும், மனதும் நம் பேச்சை கேட்டு நடக்க வேண்டும்; அதுவே சரியான ஆரோக்கியம்.






      Dinamalar
      Follow us