sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஊசி போட்டால் வலிக்காது!

/

கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஊசி போட்டால் வலிக்காது!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஊசி போட்டால் வலிக்காது!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: ஊசி போட்டால் வலிக்காது!


PUBLISHED ON : டிச 24, 2017

Google News

PUBLISHED ON : டிச 24, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் அம்மாக்கள் பொதுவாக கேட்பது, 'டாக்டர், எனக்கு ஆப்பரேஷன் செய்த போது, முதுகில் இன்ஜெக் ஷன் போட்டாங்க; அப்போது வந்த முதுகு வலி இன்னும் சரியாகவில்லை' என்று! ஆப்பரேஷன் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், 10 ஆண்டுகளுக்குப் பி சொல்கின்றனர். இன்னும் சிலர், 65, 70 வயதில் கூட, 'எனக்கு ஆப்பரேஷன் செய்ததால் ஏற்பட்ட முதுகு வலி, இன்னும் சரியாகவில்லை' என்கின்றனர்.

தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். முதுகில் இன்ஜெக் ஷன் போட்டு ஆப்பரேஷன் செய்வதால், முதுகு வலி நீடிக்காது. அதனால், வலி வருவது கிடையாது. வயிற்றில் குழந்தை இருக்கும் போது, பெண்ணின் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. தசைகள், மூட்டுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதாலேயே, முதுகு வலி சரியாகாமல், நீண்ட நாட்களுக்கு இருக்கிறது. குழந்தை பிறந்த பின், உடம்பை சரியாக கவனிப்பதில்லை. கர்ப்ப காலத்தில் சராசரியாக, 12 - 15 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது. குழந்தையின் எடை, இரண்டரை முதல் மூன்றரைக் கிலோ தான்; பிளசென்டா, பனிக்குட நீர் மற்றும் கொழுப்பு இவையெல்லாம் சேர்ந்து, உடல் எடையை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில், 'ரிலாக்சின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது, இடுப்பெலும்பு, தசைகளை தளர்த்தி, 'ரிலாக்ஸ்' செய்யும்; குழந்தை, சுலபமாக வெளியில் வருவதற்கு, இது உதவியாக இருக்கும். இந்த ஹார்மோன், முதுகைச் சுற்றியுள்ள ஜவ்வு, சிறிய மூட்டு இணைப்புகளையும் தளர்த்தி விடுகிறது. குழந்தை பிறந்த பின், உடற்பயிற்சி செய்து, தளர்ந்த தசைகளை, பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை; அதனால், இந்த வலி அப்படியே உள்ளது.குழந்தை பிறந்தவுடன், தசைகள் எல்லாம் தளர்வாக இருக்கும் காரணத்தால், நம்முடைய முதுகுத் தண்டை, 'சப்போர்ட்' செய்யும் தசைகள் எல்லாம் தளர்ந்து விடும். குழந்தை பிறந்தவுடன், முதுகுத் தண்டை சுற்றியுள்ள தசைகளை வலிமைப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை, சிறிய அளவில் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்ய ஆரம்பிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மல்லாந்து படுக்காமல், இடது பக்கம் ஒருகளித்து படுப்பது மிகவும் நல்லது. இரண்டு முட்டிகளுக்கும் நடுவில் சிறிய தலையணையை வைத்துக் கொண்டால், முதுகுத் தண்டிற்கு இன்னும் நல்லது.

உட்காரும் போது, கீழே ஸ்டூல் வைத்து, அதன் மேல் கால்களை வைத்துக் கொண்டால், முதுகிற்குப் போகும், 'ஸ்ட்ரெஸ்' குறையும். இன்ஜெக் ஷன் போடுவதால் வலி வருவது கிடையாது.

டாக்டர் அஸ்வின் விஜய்பொதுநல மருத்துவர், சென்னை.www.strengthindiamovement.com






      Dinamalar
      Follow us