sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்

பத்து கேள்விகள் பளிச் பதில்கள்


PUBLISHED ON : ஜன 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1 டைபாய்டு காய்ச்சல் எப்போது வரும்?

சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் ஏற்படும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது டைபாய்டு. மழைக் காலங்களில், தெருக்களில் தேங்கும் மழைநீரில், குப்பை கழிவுகள் சேர்ந்து, நோய் கிருமிகள் வாழ வழிவகுக்கிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் தன்மை கொண்டது.

2 இந்நோய் வரக் காரணம்?

'சல்மோனெல்லா டைபி' எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன.

3 நோய் கிருமிகள் எங்கு உற்பத்தியாகின்றன?

அசுத்தமான இடங்களிலும், தெருவோர கழிப்பிடங்களிலும் இந்தக் கிருமிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள் மூலம், வீட்டில் பாதுகாக்கப்படாத குடிநீரிலும், உணவிலும் கிருமிகள் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த

உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு, டைபாய்டு காய்ச்சல் ஏற்கிறது.



4 ஏற்கனவே டைபாய்டு வந்து குணமடைந்தோருக்கு இந்நோய் மறுபடியும் தாக்குமா?


கண்டிப்பாக! அதுமட்டுமல்ல, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில், இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள் வரை வசிக்கும். அப்போது, அந்த நபரின் மலத்திலும், சிறுநீரிலும் அவருக்கு தெரியாமலேயே அவை வெளியேறி,

அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும்.

5 அறிகுறிகள் என்ன?

நாட்பட்ட காய்ச்சல், உடல்வலி, தலைவலி முக்கிய அறிகுறிகள். ஒவ்வொரு நாளும், காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். தலைவலி கடுமையாகும். நாக்கில் வெண்படலம் தோன்றும். பசி இருக்காது. வாந்தி, வயிற்று வலி வரும். உணவைச் சாப்பிட முடியாது. இதனால், நோயாளிக்கு சோர்வு அதிகரித்து மயக்கம் வரும்.

6 காய்ச்சலின் பாதிப்புகள்?

குழந்தைகளைப் பாதிக்கும்போது, 'காய்ச்சல் வலிப்பு' வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் துவக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, 'நச்சுக்குருதிநோய்' ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரலாம்.

7 என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?

காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள், நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை அவசியம். குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்ட முதல் பத்து நாட்களுக்கு, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை எடுக்க வேண்டும். ரத்தத்தை எடுத்து, ஒரு வளர் கருவியில் வைத்து, கிருமிகள் வளர்கின்றனவா என்று பார்க்கும் பரிசோதனை இது.

இப்பரிசோதனை மூலம் தான், டைப்பாய்டு உள்ளதா என, உறுதியாக சொல்ல முடியும்.

8 'வைடால்' டைபாய்டு ரத்தப் பரிசோதனை எடுக்கலாமா?

இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான். டைபாய்டு வந்தவருக்கு இந்த நோய்க் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது. காய்ச்சல் கண்டு எட்டு நாட்களுக்கு பின், இப்பரிசோதனை செய்தால் மட்டுமே பயன் உண்டு.

9 டைபாய்டின் போது பசியின்மை இருக்குமா? உணவு என்ன எடுக்கலாம்?

கண்டிப்பாக. குடலில் புண் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், காரமான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளான கஞ்சி, பழங்கள், பழச்சாறுகள் போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம். வெந்நீர் மட்டுமே பருக வேண்டும். வெளி உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சமைக்காத உணவுகளான தயிர் பச்சடி, 'சாண்ட்விச்' போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

10 சிகிச்சைகள் என்னென்ன?

ஐந்து நாட்கள் கழித்து காய்ச்சல் இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இதற்கு, மருத்துவர் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரா.விஜய் சக்ரவர்த்தி

பொது நல மருத்துவர்,

சென்னை.

97513 10211

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us