sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

கருகும் மொட்டுகளும் சிதையும் கனவுகளும்

/

கருகும் மொட்டுகளும் சிதையும் கனவுகளும்

கருகும் மொட்டுகளும் சிதையும் கனவுகளும்

கருகும் மொட்டுகளும் சிதையும் கனவுகளும்


PUBLISHED ON : ஏப் 02, 2026 06:52 PM

Google News

PUBLISHED ON : ஏப் 02, 2026 06:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கொஞ்சி விளையாடும் ஒரு குழந்தையின் சத்தம் கேட்காத தேசம் செத்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.'

இன்று லெபனானின் ஹஸ்மியே வீதிகளிலும், காசாவின் இடிபாடுகளுக்கு இடையிலும் கேட்கும் குழந்தைகளின் அழுகுரல், வெறும் கண்ணீர் துளிகள் அல்ல; அவை ஒரு தலைமுறையின் சிதைந்து போன ஆன்மாவின் கதறல். போர் என்பது வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, அது ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே வேரோடு பிடுங்கி எறிவதாகும்.

பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டிய வயதில், ஏவுகணைகளின் சத்தத்தைக் கொண்டு அதன் வகையைக் கண்டறியும் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள் மேற்காசியக் குழந்தைகள். கைகளில் வண்ணத்துப் பூச்சிகளையும் பொம்மைகளையும் ஏந்த வேண்டிய பிஞ்சு விரல்கள், இன்று தங்கள் உடைந்த வீட்டின் செங்கற்களையும், போரில் பிரிந்த பெற்றோரின் புகைப்படங்களையும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றன.Image 1557514ஒரு குழந்தை தன் தாயின் மடியில் தலைசாய்க்கும்போது கிடைக்கும் பாதுகாப்பு உணர்வுதான் அதன் ஆளுமையை வளர்க்கிறது. ஆனால், மேற்காசியாவில் ஒரு குழந்தைக்குத் தன் தாய் அடுத்த நிமிடம் உயிரோடு இருப்பாரா என்ற பயமே வாழ்நாள் முழுவதும் நிழலாடுகிறது. 'தூங்கினால் விழிப்போமா?' என்ற அச்சத்தில் கண்மூடும் அந்தச் சிறுமியின் கண்கள், உலக நாடுகளின் மனசாட்சியைப் பார்த்துக் கேட்கும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

உடல் காயங்களை மருந்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால், 'போர் அதிர்ச்சி' எனும் மனக்காயம் அத்தனை எளிதில் ஆறாது. குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டால் இன்றும் பல குழந்தைகள் பயத்தில் சிறுநீர் கழிப்பதும், பேசும் திறனை இழப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் வரைந்து பழகும் ஓவியங்களில் சூரியனோ, மழையோ இருப்பதில்லை; மாறாக ரத்தமும், கறுப்புப் புகையும், துப்பாக்கிகளுமே நிறைந்திருக்கின்றன.

போர் ஒரு குழந்தையை அதன் வயதிற்கு மீறிய முதிர்ச்சிக்குத் தள்ளுகிறது. தன் தம்பியைத் தூக்கிக்கொண்டு இடிபாடுகளில் ஓடும் ஒரு சிறுவன், விளையாட வேண்டிய வயதிலேயே ஒரு குடும்பத் தலைவனாக மாறிவிடுகிறான். அவனது சிரிப்பு தொலைந்து போகிறது; அவனது கனவுகள் மண்ணோடு மண்ணாகின்றன.

லெபனானில் இன்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்தபோது, அதன் அருகே அமர்ந்து அழுத அந்தச் சிறுமியின் கண்ணீர், இந்த உலகிற்கு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்: 'உங்கள் அதிகாரப் போட்டிகளுக்கு எங்களின் இளமையைப் பலி கொடுக்காதீர்கள்.'

துப்பாக்கிக் குழல்கள் அமைதியடைந்து, குண்டுச் சத்தங்களுக்குப் பதில் குழந்தைகளின் கலகலப்பான சிரிப்பொலி அந்தத் தேசங்களில் மீண்டும் என்று கேட்கிறதோ, அன்றுதான் இந்த உலகம் உண்மையான நாகரிகத்தை அடைந்ததாகக் கருதப்படும்.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us