sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

சிதைந்துபோகும் கனவுகள்: அகதிகளாகும் மழலைகள்

/

சிதைந்துபோகும் கனவுகள்: அகதிகளாகும் மழலைகள்

சிதைந்துபோகும் கனவுகள்: அகதிகளாகும் மழலைகள்

சிதைந்துபோகும் கனவுகள்: அகதிகளாகும் மழலைகள்


PUBLISHED ON : மார் 02, 2026 06:23 PM

Google News

PUBLISHED ON : மார் 02, 2026 06:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யுத்தங்கள் எப்போதும் வரைபடங்களை மாற்றியமைக்கின்றன, ஆனால் அவை அழிப்பது மனிதர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையும்தான். இன்று தெற்கு லெபனானில் வானத்திலிருந்து பொழியும் நெருப்பு மழையும், நிலத்தில் அதிரும் வெடிகுண்டுச் சத்தங்களும் ஒரு தேசத்தையே நிலைகுலையச் செய்துள்ளன.

வானில் எழும் இந்தப் புகை மண்டலங்கள் வெறும் வெடிமருந்தின் துகள்கள் அல்ல; அவை ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் எரிந்து சாம்பலாவதன் சாட்சி. உலக அரசியலில், சாதாரண மனிதனின் உயிர் மிக மலிவானதாகிவிட்டது.'Image 1543253நேற்றுவரை சிரிப்புச் சத்தம் கேட்ட வீடுகள் இன்று வெறும் கான்கிரீட் குவியல்களாகக் கிடக்கின்றன. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் இலக்குகளைத் தாண்டி, அப்பாவி மக்களின் குடியிருப்புகளைச் சிதைத்து வருகின்றன. ஒரு நொடியில் உழைத்துச் சேர்த்த சொத்துக்களும், நினைவுகளும் மண்ணோடு மண்ணாகின்றன. அருகில் நின்றவர் அடுத்த நொடி பிணமாவதும், கூட விளையாடிய நண்பர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலியாவதும் அங்கு அன்றாடக் காட்சிகளாகிவிட்டன. மரணம் எப்போது, யாருடைய கதவைத் தட்டும் என்று தெரியாத மரண பயத்தில் மக்கள் உறைந்து போயுள்ளனர்.

வீடுகள் நொறுங்கி, தெருக்கள் ரத்தக் கறையோடு காட்சியளிக்க, எஞ்சிய உயிரைக் காக்க மக்கள் கையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வெளியேறுகின்றனர். அப்படி ஒரு சிறிய ரக லாரியில் தஞ்சம் புகுந்த ஒரு குடும்பத்தின் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. அந்த வாகனத்தில் மூட்டை முடிச்சுகளுக்கு நடுவே, தங்களின் வேர்களைப் பிடுங்கிக்கொண்டு தலைநகர் பெய்ரூட்டை நோக்கி அவர்கள் பயணிக்கிறார்கள்.

இந்தக் கூட்ட நெரிசலில், லாரியின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுமி அல்லது சிறுவனின் விழிகளில் தேங்கியிருக்கும் மௌனம், ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது.

'ஏன் எனது பொம்மைகளை எடுக்க விடவில்லை?'

'ஏன் என் நண்பன் இன்னும் வரவில்லை?'

'நாம் எங்கே போகிறோம்?'Image 1543254இந்தக் கேள்விகளுக்குப் பெற்றோரிடமும் பதிலில்லை, போர் தொடுப்பவர்களிடமும் பதிலில்லை. வானில் சீறிப்பாயும் போர் விமானங்களின் இரைச்சலைக் கேட்டு அந்தப் பிஞ்சு இதயங்கள் நடுங்குகின்றன. விவரம் அறியா மழலைகள் மழங்க மழங்க விழித்தபடி, தங்களின் எதிர்காலம் எந்தத் திசையில் இருக்கிறது என்று தெரியாமல் நகர்கிறார்கள்.

அதிகாரப் பசிக்காகவும், எல்லைகளுக்காகவும் போர் புரியும் உலக நாடுகளே... இந்த குழந்தைகளின் சிதைந்த கனவுகளுக்கு யார் பொறுப்பு? பாதுகாப்பான கூரை இன்றி, கல்வி இன்றி, உறவுகளை இழந்து நடுரோட்டில் நிற்கும் இந்த மழலைகளுக்கு நீங்கள் தரும் பதில் என்ன? ஆயுதங்கள் அமைதியைக் கொண்டுவரும் என்று வாதிடும் உங்களின் தர்க்கங்கள், ஒரு குழந்தையின் கண்ணீருக்கு முன்னால் அர்த்தமற்றவை.

போர் என்பது வெறும் செய்திகளோ அல்லது வரைபடத்தில் மாறும் கோடுகளோ அல்ல; அது ரத்தமும் சதையுமான மனிதர்களின் வலி. தெற்கு லெபனானிலிருந்து இடம்பெயரும் ஒவ்வொரு குழந்தையும் உலக மனசாட்சியிடம் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டே செல்கிறது. அந்தக் கேள்விக்கு 'அமைதி' ஒன்றே தீர்வாக இருக்க முடியும். இல்லையெனில், நாம் விட்டுச் செல்வது ஒரு சுடுகாடாக மட்டுமே இருக்கும்.

தெற்கு லெபனானிலிருந்து தப்பித்து தலைநகர் பெய்ரூட்டை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அங்கேயும் மரணம் அவர்களைத் துரத்துகிறது. பெய்ரூட்டின் மக்கள் நெருக்கம் மிகுந்த தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் இடைவிடாது குண்டுகளைப் பொழிகின்றன. வானுயர எழும் கரும்புகை மண்டலம், அந்த இடத்தின் பேரழிவை ஊர்ஜிதப்படுத்துகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் தரைமட்டமாக்கப்படுகின்றன. குண்டுவெடிப்பின் அதிர்வில் ஜன்னல் கண்ணாடிகள் சிதறுவதும், கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிவதும் அந்தப் பகுதியை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது. புகையும் தூசியும் சூழ்ந்த அந்தச் சூழலில், மீட்புப் படையினர்கூட உள்ளே நுழைய முடியாத அளவிற்குத் தாக்குதலின் வீரியம் உள்ளது.

மக்களின் அவலநிலை:தெற்கிலிருந்து தப்பியோடி வந்து பெய்ரூட்டில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு இது மற்றுமொரு பேரதிர்ச்சி. 'எங்கு சென்றாலும் மரணம் எங்களைத் துரத்துகிறதா?' என்ற ஏக்கத்துடன் மக்கள் அலறிக் கொண்டு வீதிக்கு வருகிறார்கள். கரும்புகை கவிழ்ந்த வானம், அந்தத் தேசத்தின் இருண்ட காலத்தைக் குறிப்பதாக உள்ளது.

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us