PUBLISHED ON : டிச 09, 2025 05:14 PM

கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க லண்டன் நகரமே வண்ணமயமாகவும் உற்சாகமாகவும் மாறும். அந்த உற்சாகத்தைக் கூட்டும் வகையிலான ஒரு கலகலப்பான நிகழ்வுதான், மத்திய லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் நாய்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு



ஒவ்வொரு நாயும் அணிந்திருந்த உடைகள் தனித்துவமானவை. சாண்டா கிளாஸ் தொப்பிகள், பனிமனிதன் உருவங்கள் பொறிக்கப்பட்ட ஸ்வெட்டர்கள், மின்னும் விளக்குகள் பொருத்தப்பட்ட உடைகள் என நாய்கள் போட்டியிட்டுக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த உல்லாச அலங்காரங்களைக் காண, சுற்றுலாப் பயணிகள் மற்றும் லண்டன் வாசிகள் திரளாகக் கூடினர்.
இந்த நிகழ்ச்சி வெறும் வேடிக்கைக்காக மட்டும் நடத்தப்படவில்லை. லண்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விலங்கு மீட்பு அமைப்புகளுக்கு நிதியுதவி திரட்டுவது இதன் முக்கிய நோக்கமாகும். மேலும், வீடற்ற விலங்குகளைத் தத்தெடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த அணிவகுப்பு உதவியது.
ஒருபுறம் கிறிஸ்துமஸ் உற்சாகத்தைத் தூண்டுவதுடன், மறுபுறம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான அன்பான பிணைப்பை வெளிப்படுத்துவதாகவும், சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் அமைந்தது.
-எல்.முருகராஜ்

