தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்

அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்

அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்


PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் எட்மண்ட்ஸ் நகரின் வீதியில் ஒரு வாகனம் நிற்கிறது,அந்த வாகனத்தில் 'எட்மண்ட்ஸ் ஃபுட் பேங்க்'(எட்மண்ட்ஸ் உணவு உதவி மையம்) என எழுதப்பட்டுள்ளது அதன் பின்னாலிருந்து இறக்கப்படும் ஒவ்வொரு ரொட்டித் துண்டிலும், பால் பாக்கெட்டிலும், பழக் கூடையிலும், பசியின் தீரா வலியைச் சுமந்த பல நூறு கண்கள் நம்பிக்கையுடன் நிலைத்திருக்கின்றன.Image 1479058பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, தன்னார்வலர்களின் கைகளால் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப பைகளில் நிரப்பப்படுகின்றன. காத்திருப்பு முடிவுக்கு வரும் அந்த நொடியில், வரிசையில் நிற்கும் மக்களிடையே ஒரு மெல்லிய சலசலப்பு. அது அடித்துப் பிடித்துச் செல்லும் ஆரவாரம் அல்ல; 'நமக்கு உணவு கிடைத்துவிடுமா?' என்ற ஏக்கமும், பசியின் அவசரமும் கலந்த தவிப்பு. 'அனைவருக்கும் உணவு இருக்கிறது, அவசரம் வேண்டாம்' என்று ஒலிக்கும் தன்னார்வலர்களின் குரல்கள், அந்த தவிப்பிற்கு ஆறுதல் அளிக்கின்றன.Image 1479059முதலில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முதியவர்களுக்கும் முன்னுரிமை. தன் பங்குப் பையைப் பெற்ற ஒரு பிஞ்சு மகள், ஆவலுடன் அதைத் திறந்து பார்க்கிறாள். உள்ளே இருந்த ஒரு சிவந்த ஆப்பிளைக் கண்டதும், குழந்தையின் முகத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம்! அதன் கண்களில் தெரிந்த அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணை ஏது? அந்த அமுதக் கனியை தன் தாயிடம் காட்டிவிட்டு, அங்கேயே அதை ரசித்து ருசித்துச் சுவைக்கத் தொடங்குகிறது. பசி வென்ற அந்த ஒரு நொடியில், உலகில் உள்ள எல்லா செல்வங்களும் அந்த குழந்தையின் முன் தோற்றுப் போகின்றன.Image 1479060குழந்தையைப் போலவே சிலர், பசியின் கொடுமை தாளாமல், அங்கேயே உணவைப் பிரித்து உண்ணத் தொடங்குகிறார்கள். மற்றவர்களோ, கிடைத்த உணவுப் பையை அணைத்தபடி, நாளையும் இது போல உணவு கிடைத்தால் நல்லது என்ற நம்பிக்கையைச் சுமந்து தளர்நடை போட்டு தங்கள் இல்லம் நோக்கிச் செல்கின்றனர்.Image 1479061கொடுப்பவர்கள் உள்ளூர் சமூக ஆர்வலர்கள். பெறுபவர்கள், வறுமையில் வாடும் அமெரிக்கக் குடிமக்கள். கேட்டால் நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால் இதுதான் நிதர்சனம்.

உலகத்திற்கே வளத்தின் அடையாளமாகத் திகழும் அமெரிக்காவில்கூட, வேலை இழப்பு, விண்ணை முட்டும் விலைவாசி, குடும்பத் தலைவரின் திடீர் மறைவு, நோய்மையின் தாக்கம், குறைந்த வருமானம் போன்ற எண்ணற்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை உணவிற்காகப் போராடுகின்றன. 'அம்மா, பசிக்கிறது' என்று வாய்விட்டுக் கேட்க தன்மானம் தடுக்கிறது; ஆனால், பசியோ வயிற்றைப் புரட்டுகிறது.

இந்த அவலத்தைக் கண்ட சில நல்ல உள்ளங்கள், வீடுகளில் மீதமான உணவுகளைச் சேகரித்து வந்து பசியால் வாடுவோருக்கு வழங்க ஆரம்பித்தனர். அன்று சிறியதாகத் தொடங்கிய அந்த சேவைதான், இன்று 'எட்மண்ட்ஸ் ஃபுட் பேங்க்' என்ற பெயரில் பெரிதாக வளர்ந்து நிற்கிறது.'எட்மண்ட்ஸ் ஃபுட் பேங்க்' என்ற பெயருக்குக் காரணம், அது அமைந்துள்ள இடம்தான்.இந்த உணவு வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள 'எட்மண்ட்ஸ்' என்ற நகரத்தில் அமைந்துள்ளது

ஆனால், வேதனை என்னவென்றால், காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை. உதவி பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது, ஆனால் கொடுக்கும் கரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இந்த இக்கட்டான சூழலில், அரசாங்கம் இந்த மக்களின் பசிப்பிணி துயர் துடைக்க முன்வர வேண்டும் என்ற ஏக்கத்துடன் இந்த தொண்டு நிறுவனத்தினர் தங்கள் சேவையைத் தொடர்கின்றனர்.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us