sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நிஜக்கதை

/

'காட்சிகளின் கவிஞர்' ரகு ராய்

/

'காட்சிகளின் கவிஞர்' ரகு ராய்

'காட்சிகளின் கவிஞர்' ரகு ராய்

'காட்சிகளின் கவிஞர்' ரகு ராய்


PUBLISHED ON : ஏப் 27, 2026 04:16 PM

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2026 04:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் ஆன்மாவைத் தனது கேமரா லென்ஸ் மூலம் உலகிற்குக் காட்டிய புகைப்பட மேதை ரகு ராய், டெல்லியில் நேற்று காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள லோதி தகன மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.Image 1570008புகைப்படக் கலையைத் தனது சுவாசமாகக் கொண்டிருந்த ரகு ராயின் இறுதிச் சடங்கு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தகனம் செய்யப்படுவதற்கு முன், அவர் உயிராய் நேசித்த அவரது கேமராவும், ஒரு பிலிம் ரோலும் அவரது உடல் மீது வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. வாழ்நாள் முழுவதும் எதைச் சுவாசித்தாரோ, அதையே தனது இறுதித் துணையாகவும் கொண்டு அவர் விடைபெற்றார்.Image 1570009-இல் பிறந்த ரகு ராய், அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர், 23-வது வயதில் தற்செயலாக ஒரு கழுதைக் குட்டியைப் படம் பிடித்தார். அந்தப் புகைப்படம் லண்டனின் 'தி டைம்ஸ்' பத்திரிகையில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவே அவரது அரை நூற்றாண்டு காலப் புகைப்படப் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது. 1966-இல் 'தி ஸ்டேட்ஸ்மேன்' பத்திரிகையில் தலைமைப் புகைப்படக் கலைஞராகப் பணியைத் தொடங்கிய அவர், இந்தியாவின் மிக உயரிய காட்சி அடையாளங்களைச் செதுக்கினார்.Image 1570010ரகு ராயின் கேமரா அழகை மட்டும் தேடவில்லை; அது இந்தியாவின் வலிகளையும் போராட்டங்களையும் ஆவணப்படுத்தியது.1971 வங்கதேச அகதிகள் நெருக்கடி, 1984 போபால் நச்சுவாயுக் கசிவு போன்ற வரலாற்றுத் துயரங்களை இவரது லென்ஸ் உலகிற்கு உரக்கச் சொன்னது.அன்னை தெரசா முதல் எம்.எஸ். சுப்புலட்சுமி வரை, இந்திரா காந்தி முதல் தலாய் லாமா வரை இவர் புகைப்படம் எடுக்காத ஆளுமைகளே இல்லை.கருப்பு - வெள்ளை நிழற்படங்களில் இவர் வடித்த கவிதைகள் உலகத் தரம் வாய்ந்தவை.Image 1570011புகழ்பெற்ற 'மேக்னம் போட்டோஸ்' அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே. உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஹென்றி கார்டியர்-பிரெஸன் என்பவரால் பரிந்துரைக்கப்பட்ட பெருமை இவருக்கு உண்டு. 1972-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், 'கேமரா இல்லாமல் நான் ஒன்றுமில்லை; ஒரு புகைப்படம் ஒருபோதும் பொய் சொல்லாது' என்பதில் ஆணித்தரமான நம்பிக்கை கொண்டிருந்தார்.Image 1570012'க்ளோஸப்' படங்களின் காதலரான இவர், 'உன்னால் ஒரு விஷயத்திற்கு மிக நெருக்கமாகச் செல்ல முடியவில்லையெனில், உனது புகைப்படம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது' என்பார். பிலிம் ரோல் காலம் முதல் இன்றைய டிஜிட்டல் காலம் வரை தன்னை வியக்கத்தக்க வகையில் தகவமைத்துக் கொண்டவர். இன்று நாம் ரசிக்கும் 'இந்தியா டுடே' போன்ற இதழ்களின் காட்சித் தரத்தைத் தீர்மானித்தவர் இவரே.

வரலாறு என்பது வெறும் எழுத்துக்களால் ஆனது மட்டுமல்ல, அது ரகு ராய் போன்ற மேதைகள் பதிவு செய்த காட்சிகளாலும் ஆனது. 'வரலாறு எழுதப்படலாம், திருத்தி எழுதப்படலாம்; ஆனால் புகைப்படங்களால் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு யாராலும் மாற்ற முடியாதது' என்ற அவரது வரிகள் வெறும் வாசகம் அல்ல; அது அவர் வாழ்ந்த வாழ்க்கை.Image 1570013இன்று அவர் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இனி வரும் தலைமுறை புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் ஒவ்வொரு 'பிரேமிற்குள்ளும்' ரகு ராய் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டே இருப்பார். இந்தியாவின் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் அவர் விட்டுச் சென்ற நிழற்படங்கள் அவரை என்றும் வாழ வைக்கும்.

போய் வாருங்கள் ஐயா... உங்கள் லென்ஸ் இமைக்க மறந்தாலும், நீங்கள் பதிவு செய்த பிம்பங்கள் என்றும் அழியாது!

-எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us