PUBLISHED ON : ஜூலை 17, 2026 07:51 PM

தனது ஓவியங்களால் ஒரு கிராமத்தையே மீட்டெடுத்த 'ரெயின்போ தாத்தா'வின் கதை இது.
சீன உள்நாட்டுப் போருக்குப் பின் (1949-இல்) தைவானுக்கு வந்த தேசியவாத ராணுவ வீரர்களுக்காகத் தைவானின் தைச்சுங் நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட எளிமையான குடியிருப்புகளில் குடியேறியவர்களில் ராணுவ வீரர்களில் ஹுவாங் யுங்-பு என்பவரும் ஒருவர்.



1,200 வீடுகளுடன் பிரம்மாண்டமாக இருந்த இக்குடியிருப்பில், இன்று எஞ்சியிருப்பது ஐந்து வீடுகள் மட்டுமே. தற்போது அங்கு யாரும் வசிப்பதில்லை. இந்த கிராமத்தின் கடைசி மனிதராக வசித்து வந்த இந்த இடத்தை கலைப்பூங்காவாக மாறுவதற்கு வித்திட்ட 'ரெயின்போ தாத்தா'வும் தனது 101-ஆவது வயதில் (ஜனவரி 2024-இல்) இறந்தார்.
தற்போது இந்த இடத்தை தைச்சுங் மாநகராட்சி அரசு தனது நேரடிப் பொறுப்பில் எடுத்துக் கொண்டு உள்ளூர் கலைஞர்கள் மற்றும் மாணவர்களின் உதவியோடு பழமை மாறாமல் புதுப்பித்துள்ளது.
இன்று தைவானின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் 'ரெயின்போ கிராமம்', தனி ஒரு மனிதனின் கற்பனைத் திறனும் விடாமுயற்சியும் ஒரு வரலாற்றையே எப்படி மாற்றி எழுத முடியும் என்பதற்கு வாழும் சாட்சியாகத் திகழ்கிறது.
-எல்.முருகராஜ்
