PUBLISHED ON : செப் 02, 2024 12:00 AM

நீலகரி மாவட்டம் குன்னுாரைச் சேர்ந்த விஜய்கிருஷ்ணராஜ்-அன்னபூரணி தம்பதியினரின் மகளான பிரியங்கா தற்போது பெங்களூரில் பள்ளி இறுதியாண்டு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர், கிரிக்கெட் உள்ளீட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவரது மனம் கார் பந்தயங்களையே நாடியது.
இதனை பெற்றோரிடம் வெளிப்படுத்திய போது அவர்கள் மகளின் ஆர்வத்திற்கு குறுக்கே நிற்காகமல் சம்மதித்தனர்.
கோ-கார்ட்டில் ஆரம்பித்து இரண்டு வருடங்களில் படிப்படியாக தனது தகுதியை உயர்த்திக் கொண்டவர், சர்வதேச கார் பந்தய வீரர்கள் கலந்து கொள்ளும் பார்முலா 4 கார் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் தகுதியினையும் பெற்றார்.
இதன் காரணமாக சென்னையில் நடந்த பந்தயத்தில் கலந்து கொண்டார்,இந்தப் போட்டியைப் பொறுத்தவரை ஆண்கள்,பெண்கள் பேதமின்றி பொதுவாக நடக்கும், இதில் ஆண்களுக்கு சவால் விட்டு கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒரே தமிழ்ப்பெண் பிரியங்கா மட்டுமே.
இந்தப் போட்டியில் பிரியங்கா முதல் மூன்று இடத்திற்குள் வரவில்லை என்றாலும் வெற்றிகரமாக சுற்றிவந்தவர்களில் இவரும் ஒருவராவார்.
-எல்.முருகராஜ்.