PUBLISHED ON : டிச 05, 2016

ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண் குழு நடத்திய ஆய்வில், 80 கோடி பேர் போதுமான உணவின்றி, பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் குழு (UN Food and Agriculture Organisation (FAO)) சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில், உடல் பருமன் பாதிப்பால், 190 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முறையான உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி இல்லாததே இதற்கு காரணம். மறுபுறம், 80 கோடி பேர் போதுமான உணவின்றி, பசியுடனே உறங்கச் செல்கின்றனர். குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்களே, ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை முக்கிய பிரச்னையாக அரசுகள் கருத வேண்டும். விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி உணவு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
