sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

அச்சிலே உருவாக்கப்படும் கட்டடம்

/

அச்சிலே உருவாக்கப்படும் கட்டடம்

அச்சிலே உருவாக்கப்படும் கட்டடம்

அச்சிலே உருவாக்கப்படும் கட்டடம்


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முப்பரிமாண அச்சு (3D Printing) தொழில்நுட்பம் பற்றி 'பட்டம்' இதழில் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தோம். பொம்மைகள், சிறு இயந்திரங்கள், அன்றாட வாழ்வில் பயன்படும் பொருள்கள் என பலவற்றை முப்பரிமாண அச்சு முறையில் உருவாக்க முடியும். தற்போது துபாயில் முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டடத்தை அச்சிடலாமா?! ஆமாம்! முப்பரிமாண அச்சு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, முழுவதும் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட உலகின் முதல் கட்டடம் (3D Printed Building) துபாயில் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் சிறப்பு கான்கிரீட் கலவை, வலுப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் இழை, ஜிப்சம் ஆகிய மூலப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 17 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒற்றை மாடிக் கட்டடம் இது. இதற்குப் பயன்படுத்தப்பட்ட 3 டி பிரிண்டர், 20 அடி உயரமும், 120 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்டது. இந்த பிரிண்டரை இயக்க ஒருவர் மட்டுமே போதும். இந்த கட்டடப் பணியில், பொறியாளர், கட்டுமான அமைப்பாளர், எலக்ட்ரீஷியன் என 18 பேர் பணி புரிந்துள்ளனர். இந்தக் கட்டடத்தை கட்டி முடிக்க ஒரு லட்சத்து 40 ஆயிரம் டாலர் செலவாகி உள்ளது. துபாயில் 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதக் கட்டடங்கள் முப்பரிமாண முறையிலேயே உருவாக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us