உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : பிப் 15, 2016
அ நிறம் | அளவு
பிப். 8 - ரயில்களில் ஏ.சி. பெட்டிகளில் பயணம்செய்பவர்களுக்கு படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவை வழங்கப்படும். இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதிப் பெட்டி, சாதாரணப் பெட்டிகளில் பயணிப்போருக்கு இந்த வசதி இல்லை. இதற்குத் தீர்வாக, ரயிலில் முன்பதிவு செய்தவர்கள், உரிய தொகை செலுத்தினால் படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவற்றை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் விவரங்களை, 1323 என்ற இலவச தொலைபேசி எண்ணில் கேட்டு பெறலாம்.
