இளம் எழுத்தாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை
இளம் எழுத்தாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை
PUBLISHED ON : டிச 04, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாகித்ய அகாதெமி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இளம் எழுத்தாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நாளை தொடங்குகிறது. சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கூட்ட அரங்கில் நாளை (5.12.17) காலை பத்து மணிக்குத் தொடங்குகிறது.
இந்நிகழ்வில், 'தமிழ்ச் சிறுகதைகள் -படைப்பும் பார்வையும்', 'மொழியும் கதையும்', 'சிறுகதை செப்பனிடுதல்', 'கற்றுத்தரும் கதைகள்', 'கதை,- கதையாக உருவாகும் இடம்', 'சிறுகதை- கருவும் உருவும்' ஆகிய தலைப்புகளில் நிகழவிருக்கும் அமர்வுகளில், தமிழின் பிரபலமான எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இளம் எழுத்தாளர்களுக்கும், புதிதாக எழுத விரும்புபவர்களுக்கும் இப்பட்டறை பெரிதும் உதவும்.

